Posted by: joker
« on: Today at 01:16:18 PM »கவலைகள் என்னவோ
அந்த குழந்தைக்கு
சிறியதாக இருக்கலாம் ஆனால்
அந்தச் சிறு முகம்
அம்மாவின் தோளில் புதைந்தபோது,
உலகத்தின் எல்லா சத்தங்களும்
திடீரென அமைதியாகிப் போயின.
அழுகையை அடக்கத் தெரியாத
அந்தச் சிறிய இதயத்திற்கு
உலகமே பாதுகாப்பற்றதாகத் தோன்றிய அந்த நொடியில்
ஒரே ஒரு இடம்தான் சொர்க்கமாக இருந்தது
அது... அம்மாவின் மார்பு.
அம்மாவின் அணைப்பில்
பசி மறந்துவிடும்
வலி மறைந்துவிடும்
பயம் கரைந்துவிடும்
உலகமே சிறியதாகிவிடும்
குழந்தை தூங்கும் வரை
அவள் விழித்திருப்பாள்...
குழந்தை சிரிக்கும் வரை
தன் வலியை மறைத்திருப்பாள்
குழந்தை வெற்றி பெறும் வரை
தன் கனவுகளையே தியாகம் செய்திருப்பாள்.
புயல் வந்தாலும்
மழை பெய்தாலும்
வாழ்க்கை எத்தனை சோதனைகளை வீசினாலும் ,
குழந்தைக்கு முதலில் நினைவுக்கு வருவது
ஒரு முகம்தான்
அம்மாவின் அணைப்பில் கிடைக்கும் நிம்மதியை
இந்த உலகத்தில் எந்த அரண்மனையும் தர முடியாது
அம்மாவின் மடியில் கிடைக்கும் பாதுகாப்பை
எந்த சொர்க்கமும் ஈடு செய்ய முடியாது
அம்மா என்பது
ஒரு உறவு அல்ல
நம் உயிர்
எல்லா மதத்திற்கும்
பொதுவான இறைவன் அவள்
"அம்மா"
****Joker***
அந்த குழந்தைக்கு
சிறியதாக இருக்கலாம் ஆனால்
அந்தச் சிறு முகம்
அம்மாவின் தோளில் புதைந்தபோது,
உலகத்தின் எல்லா சத்தங்களும்
திடீரென அமைதியாகிப் போயின.
அழுகையை அடக்கத் தெரியாத
அந்தச் சிறிய இதயத்திற்கு
உலகமே பாதுகாப்பற்றதாகத் தோன்றிய அந்த நொடியில்
ஒரே ஒரு இடம்தான் சொர்க்கமாக இருந்தது
அது... அம்மாவின் மார்பு.
அம்மாவின் அணைப்பில்
பசி மறந்துவிடும்
வலி மறைந்துவிடும்
பயம் கரைந்துவிடும்
உலகமே சிறியதாகிவிடும்
குழந்தை தூங்கும் வரை
அவள் விழித்திருப்பாள்...
குழந்தை சிரிக்கும் வரை
தன் வலியை மறைத்திருப்பாள்
குழந்தை வெற்றி பெறும் வரை
தன் கனவுகளையே தியாகம் செய்திருப்பாள்.
புயல் வந்தாலும்
மழை பெய்தாலும்
வாழ்க்கை எத்தனை சோதனைகளை வீசினாலும் ,
குழந்தைக்கு முதலில் நினைவுக்கு வருவது
ஒரு முகம்தான்
அம்மாவின் அணைப்பில் கிடைக்கும் நிம்மதியை
இந்த உலகத்தில் எந்த அரண்மனையும் தர முடியாது
அம்மாவின் மடியில் கிடைக்கும் பாதுகாப்பை
எந்த சொர்க்கமும் ஈடு செய்ய முடியாது
அம்மா என்பது
ஒரு உறவு அல்ல
நம் உயிர்
எல்லா மதத்திற்கும்
பொதுவான இறைவன் அவள்
"அம்மா"
****Joker***

