Posted by: Yazhini
« on: Today at 01:49:45 AM »கரு மேகங்கள் வானில் உலா போக
உன் கருவிழிகளுக்குள் மையல் கொண்டேன்.
இதமான ஓர் இடம் தேடி
உன் இதயக்கூட்டில் புகுந்துக்கொண்டேன்
காற்றில் பரவும் மண்வாசனையில்
காதல் மணமும் பரவ
உனதன்பில் திக்குமுக்காடி தான் போனேன்
உன் கைகளில் அடங்கும்
சிறு குழந்தையாகி குதுக்களிக்கிறேன்
மழையில் நனைந்து உடல் சிலிர்க்க
உன் அருகாமையில் உயிரும் சிலிர்க்க
மழையின் சங்கீத கச்சேரிக்கு
இதய துடிப்பு மெட்டு அமைக்க
உன் தீண்டலில் உலகை மறக்கிறேன்
காற்றோடு பறக்கும் குடையில்
நமது எல்லைகளும் பறக்க
உன் ஸ்பரிசத்தில் பூரித்து போகிறேன்
எல்லைகளற்ற உறவாய் மாற கண்டேன்....
ஒவ்வொரு முறையும் நம் உறவிற்கு
நான் முற்றுப்புள்ளி வைக்க...
முற்றுப்புள்ளிக்கு பின்னால் மீண்டும் மீண்டும்
இட்ட புள்ளிகளால் முடிவிலி
உறவாய் மாற வியந்தேன்
உன்னில் சரணடைந்தேன் ❤️ 💜❤️
உன் கருவிழிகளுக்குள் மையல் கொண்டேன்.
இதமான ஓர் இடம் தேடி
உன் இதயக்கூட்டில் புகுந்துக்கொண்டேன்
காற்றில் பரவும் மண்வாசனையில்
காதல் மணமும் பரவ
உனதன்பில் திக்குமுக்காடி தான் போனேன்
உன் கைகளில் அடங்கும்
சிறு குழந்தையாகி குதுக்களிக்கிறேன்
மழையில் நனைந்து உடல் சிலிர்க்க
உன் அருகாமையில் உயிரும் சிலிர்க்க
மழையின் சங்கீத கச்சேரிக்கு
இதய துடிப்பு மெட்டு அமைக்க
உன் தீண்டலில் உலகை மறக்கிறேன்
காற்றோடு பறக்கும் குடையில்
நமது எல்லைகளும் பறக்க
உன் ஸ்பரிசத்தில் பூரித்து போகிறேன்
எல்லைகளற்ற உறவாய் மாற கண்டேன்....
ஒவ்வொரு முறையும் நம் உறவிற்கு
நான் முற்றுப்புள்ளி வைக்க...
முற்றுப்புள்ளிக்கு பின்னால் மீண்டும் மீண்டும்
இட்ட புள்ளிகளால் முடிவிலி
உறவாய் மாற வியந்தேன்
உன்னில் சரணடைந்தேன் ❤️ 💜❤️

