Posted by: Ashik
« on: May 19, 2026, 10:35:34 PM » கனவொன்று கண்டேன் !!
பள்ளி செல்லும் எனக்கு
என் தாய் உணவு ஊட்டினாள் !! அலங்காரமாய் நான் உடையணிந்து
வாசல் வரை வந்து நின்ற
பேரூந்தில் ஏறி பள்ளி சென்றேன் !!
கனவொன்று கண்டேன் !!
என் அக்கா அவள் மதிவண்டியில்
என்னை அமர வைத்து
ஊர்த்தெருக்களில் வலம் வந்தாள் !!
என் தங்கை என் கரம் பற்றி
நடக்க பயின்றாள் !!
கனவொன்று கண்டேன் !!
பனி முடிந்து திரும்பி வந்த
என் தந்தை எனக்காக வாங்கி வந்த தின்பண்டங்களை அவர் மடியில்
அமர வைத்து ஊட்டி விட்டார் !!
நான் சோர்வாக இருந்த போதெல்லாம் எனக்கு தான் இருக்கிறேன் என்ற
பலத்தை கொடுத்தார் !!
கனவொன்று கண்டேன் !!
விடுமுறை நாட்களில் நண்பர்கள்
என் வீடேறி வந்து மைதானத்திற்கு விளையாட என்னை அழைத்து சென்றனர் !! நீர் நிரம்பிய குளத்தில் எனக்கு
நீந்த சொல்லி கொடுத்தார்கள் !!
கனவொன்று கண்டேன் !!
என்னை சுற்றி என் குடும்பமும் என் நண்பர்களும் எப்பொழுதும் வலம் வந்தனர் !! காண்பவர்களுக்கு அலங்காரமாய் உடையனிந்து மிடுக்காய்
நான் அவர்களை ஈர்க்க செய்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
ஆதவற்றோர் இல்லத்தில் ஓரமாய்
நான் படுத்து இருந்தேன் !!
கிழிந்த என் போர்வையால் குளிர் தாங்காமல் எழுந்திருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன்!!
கிழிந்த என் சட்டையணிந்து
மெலிந்த தேகமாய் இளைத்திருந்தேன் !! தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
தாயும் இன்றி தந்தையுமின்றி ஆதரவற்ற ஒருவனாய் இந்த விடுதியில்
என்னை இணைத்து கொண்டேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
மீண்டும் தூங்கி கனவால் வரும்
அந்த சிறு சந்தோஷத்தை எண்ணி
ஏங்கி இருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!மற்றவர்களுக்கு நிதர்சனம் உருவமாய் கனவுகள் நிழலாய் இருக்க !!
எனக்கோ கனவு என் உருவுமாய் மாறி நிதர்சனம் என் நிழலாய் மாற பிராத்தனையுடன் நான் !! 💔🚶♂️
பள்ளி செல்லும் எனக்கு
என் தாய் உணவு ஊட்டினாள் !! அலங்காரமாய் நான் உடையணிந்து
வாசல் வரை வந்து நின்ற
பேரூந்தில் ஏறி பள்ளி சென்றேன் !!
கனவொன்று கண்டேன் !!
என் அக்கா அவள் மதிவண்டியில்
என்னை அமர வைத்து
ஊர்த்தெருக்களில் வலம் வந்தாள் !!
என் தங்கை என் கரம் பற்றி
நடக்க பயின்றாள் !!
கனவொன்று கண்டேன் !!
பனி முடிந்து திரும்பி வந்த
என் தந்தை எனக்காக வாங்கி வந்த தின்பண்டங்களை அவர் மடியில்
அமர வைத்து ஊட்டி விட்டார் !!
நான் சோர்வாக இருந்த போதெல்லாம் எனக்கு தான் இருக்கிறேன் என்ற
பலத்தை கொடுத்தார் !!
கனவொன்று கண்டேன் !!
விடுமுறை நாட்களில் நண்பர்கள்
என் வீடேறி வந்து மைதானத்திற்கு விளையாட என்னை அழைத்து சென்றனர் !! நீர் நிரம்பிய குளத்தில் எனக்கு
நீந்த சொல்லி கொடுத்தார்கள் !!
கனவொன்று கண்டேன் !!
என்னை சுற்றி என் குடும்பமும் என் நண்பர்களும் எப்பொழுதும் வலம் வந்தனர் !! காண்பவர்களுக்கு அலங்காரமாய் உடையனிந்து மிடுக்காய்
நான் அவர்களை ஈர்க்க செய்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
ஆதவற்றோர் இல்லத்தில் ஓரமாய்
நான் படுத்து இருந்தேன் !!
கிழிந்த என் போர்வையால் குளிர் தாங்காமல் எழுந்திருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன்!!
கிழிந்த என் சட்டையணிந்து
மெலிந்த தேகமாய் இளைத்திருந்தேன் !! தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
தாயும் இன்றி தந்தையுமின்றி ஆதரவற்ற ஒருவனாய் இந்த விடுதியில்
என்னை இணைத்து கொண்டேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!
மீண்டும் தூங்கி கனவால் வரும்
அந்த சிறு சந்தோஷத்தை எண்ணி
ஏங்கி இருந்தேன் !!
தூக்கம் கலைந்து எழுந்தேன் !!மற்றவர்களுக்கு நிதர்சனம் உருவமாய் கனவுகள் நிழலாய் இருக்க !!
எனக்கோ கனவு என் உருவுமாய் மாறி நிதர்சனம் என் நிழலாய் மாற பிராத்தனையுடன் நான் !! 💔🚶♂️

