Post reply

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: சாக்ரடீஸ்
« on: Today at 01:14:21 AM »

அஞ்சலி சொல்லப்படாத மறுபக்கம்


அஞ்சலி…

சிறு மழை துளியாய்
என் மனதிற்குள் வந்தாய்
சத்தமில்லாமல்
மனதில் இருக்கும்
ஈரத்தை உணரச் செய்தாய்

மொழி தெரியாத
வயதிலும் உன் சிரிப்பாலே
எல்லோரிடமும் பேசினாய்

அப்பாவின் கைகளில்
ஒரு சின்னஞ்சிறு
கனவாக இருந்தாய்

அம்மாவின் கண்களில்
காணல்நீராகி பிறகு
அவளின் தீராத
ரணங்களாய் மாறினாய்

என் கவலைகளும்
தங்கையின் பயங்களும்
உன்னைச் சுற்றி
வெறுப்பாக நின்றாலும்
நீ மட்டும் என்றும்
அன்பாகவே இருந்தாய்

நீ ஓடினாய்
நீ விழுந்தாய்
மீண்டும்
நீ எழுந்தாய்
எங்கள் நாட்களை
சிரிப்பொலியில் நிரப்பினாய்

ஒரு நாள்
உன் சிரிப்பு
மௌனமானது
உன் கண்கள்
அமைதியாக மூடியது

அஞ்சலி…
ஏந்திரி அஞ்சலி ஏந்திரி
என்று நாங்கள் கதறியது
உன் காதுகளில் விழவில்லையா ?

ஆனால்

நீ எங்களை
விட்டு சென்றாலும்
நம் வீட்டில்
உன் சிரிப்பு இன்னும்
ஒலித்துக்கொண்டு இருக்கிறது

அஞ்சலி
நீ இல்லாத இடத்திலும்
உன் இருப்பை
உணர செய்தவள் நீ

உன் வாழ்க்கை
வேண்டும் என்றால்
ஒரு சிறு கவிதையாக இருக்கலாம்
ஆனால்
உன் நினைவு
என்றென்றும் எங்கள்
மனதில் ஒரு தொடர்கதை

அஞ்சலி
நீ ஒரு சொல் அல்ல
நீ அன்பின் வரி

- இப்படிக்கு அண்ணன் அர்ஜுன்
Posted by: Agalya
« on: January 26, 2026, 11:22:54 PM »

கருப்பு நிலா
ஓடி ஆடி விளையாடி
எவ்வளவு
கலைத்து போய் இருந்தாலும்
காலயர்ந்து உறங்கினாலும்
என் விசும்பல் சத்தம் போதும்

என் அண்ணனை
உற்சாகப்படுத்த
என்னை வாரி அணைத்து
தூக்கத் தெரியாமல் தூக்கி
அம்மாவின்
சிறு கோவத்துக்கும் ஆளாகி

அழாதே என் தங்க கிளியே
என் கருப்பு நிலாவே
என என்னை கொஞ்சி
என் விசும்பல் சிரிப்பாக
மாறும் வரை
விடாமல் முயற்சிப்பவன்
என் அண்ணன்

அப்போது தொடங்கிய இந்த பந்தம்
இரவு பகல் பாராது
சிறு உடல் உபாதை ஏற்பட்டாலும்
அம்மாவின் அருகிலேயே
நான் என்ன செய்கிறேன்
என்று கண்ணின்
இமை போல காத்தவன்
என் அண்ணன்

இதோ நானும் வளர்ந்து
பள்ளியும் செல்ல
ஆரம்பித்து விட்டேன்.
அவளே நடந்து வந்து விடுவாள்
என அம்மா கூறினாலும்

என் பள்ளி முடிவதற்கு முன்பே
மிதிவண்டியில் வந்து நின்று
என்னை ஏத்திக்கொண்டு
வீடு வந்து சேர்த்ததற்கு பின்
தான் மறு வேலையே
என் அண்ணனுக்கு

எனக்கு வேண்டும் என்று
கை நீட்டிய மறுகணமே
என் கையில்
அதை வாங்கி தருபவன்
என் அண்ணன்

இவ்வளவு அன்பா
என்று வியர்ந்து பார்த்த
என்னுள்ளும்
மரியாதை கலந்த
அளவில்லாத அன்பு உள்ளது
என் அண்ணனுக்காக

இன்று அதை எனக்கு
காட்டத் தெரியாவிட்டாலும்
அவனது வாழ்க்கை பயணத்தின்
 ஒவ்வொரு நிகழ்விலும் 
நான் உறுதுணையாக இருந்து
என் அன்பை
வெளிப்படுத்துவேன்
 உன்னையும் பெருமைப்படுத்துவேன்
அண்ணே !!!

Posted by: Thenmozhi
« on: January 26, 2026, 10:46:24 PM »

   அழகிய அண்ணன் - தங்கை உறவு

ஒரே கருவறையில் அம்மாவின்
தொப்புள் கொடியில்
உருவான உறவு நாம்!
அண்ணா நீ சீக்கிரமாய் பூமிக்கு வந்து
உதித்து விட்டாய் என்னைப் பாதுகாக்க !
நான் அவதரித்தேன் பொறுமையாக
ஏனென்றால் உன் தங்கையாக வாழ்வதற்கு!

குழந்தை பருவத்தில் - உன்
மடிதான் என் பஞ்சு மெத்தை!
உன் மடியில் அன்பாக
தலை சாய்த்த போது உணர்ந்தேன்
தாயின் பாசத்தை உன்னிடம்!

நீ உன் பிஞ்சு விரல்களால்
என் முடியை வாரி விடுவாய்!
"பாப்பா பாடு " என்பாய்
நான் பாடகி என்று நினைத்து
பாடுவேன் பாடல்களை....

என் பிஞ்சு விரல்களை நீட்டி -நான்
"டாடி பிங்கர்..." என ஆரம்பிக்க
நீயோ அண்ணா பிங்கர்...
சொல்லு என்பாய்!
அண்ணா பிங்கர் தான்
 நீளமாகவும் நடுவிலும்
இருக்கிறது என்பாய்!
நீ சொன்ன போது புரியவில்லை?
இப்போ புரிகிறது அண்ணா உறவு
உலகினில் அசைக்க முடியாத
பெரிய உறவு என்று!

பாடிகிட்டே தூங்கிடுவேன் உன் மடியில்
நீயோ என்னை இரசிப்பது மட்டுமல்லாமல்,
என் தலை முடியை வாரி,
வண்ண வண்ணமாக அலங்கரிப்பாய்!
அம்மா சொல்லிக் கேள்விப்பட்டேன்
இந்தப் பசுமையான நினைவுகளை!

என் கைபிடித்து நடை பழக்கினாய்!
என் எண்ணங்கள் ,ஆசைகளைப்
பரிமாறிக் கொள்ளும் உற்ற 
தோழன் நீ அண்ணா.....
என் இன்பம், துன்பம்,வெற்றி,தோல்வி
அனைத்திலும் என் கூட இருப்பாய் நீ!

உன்னிடம் பேச ஆயிரம் வார்த்தைகள் இருந்தும் நான் சொல்வது
ஒன்றே ஒன்றுதான் miss you anna....
வேலையின் நிமிர்த்தம் குறைந்ததே
நாம் பேசி பழகும் நேரம்....

உடன்பிறக்கவில்லை என்றாலும்
இணையதளத்தில் பாசத்தால்
இணைந்த அண்ணாக்கள் பலர் உண்டு!
நான் பாக்கியசாலி தான்
அண்ணா -தங்கை உறவில்....

அண்ணா நீ இல்லாமல் உணர்ந்த தனிமையை போக்கி என்னை
இன்புறச் செய்தவர்கள் அரட்டை அரங்க அண்ணாக்களும், நண்பர்களுமே!
உடன் பிறந்த தங்கை இல்லையே
என்று ஒரு அண்ணாவின் ஏக்கம்...
கண்டிப்பாக நான் இருப்பேன்
அன்பு தங்கையாக.....

உலகில் ஒப்பிட முடியாத உறவு
அண்ணன் -தங்கை உறவு
அன்பினால் இணைக்கப்பட்ட
அழகான உறவு இதுவே!
அடுத்த ஜென்மத்தில் கூட
தொடர வேண்டும் இந்த
அண்ணன் - தங்கை உறவு!









Posted by: Sethu
« on: January 26, 2026, 10:38:36 PM »

தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...
அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...
'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...
அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...
தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது
தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்

அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...
அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...
தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...
திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ ஆயிரம் சண்டை வந்தாலும்
விட்டு கொடுக்காத ஒரே
உறவு அண்ணன் தங்கை
உறவு மட்டுமே

மனம் விட்டு பேச
ஒரு நல்ல அண்ணன்
கிடைத்தால் அதுவும்
தாயின் மடிதான்இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்
[ அழுதால் துடைக்கும்
சிரித்தாள் தட்டும்
செல்லமாய்க் குட்டும்
பாசக்கை தங்கை

டேய் அண்ணா எனும்
போதே அதட்டலையும்
அன்பையும் ஒரு சேர
காட்டுவது தங்கை மட்டுமே

வயதால் வளர்ந்தாலும்
தங்கச்சி எப்போதும்
என் தேவதை தான்
இந்த ஜென்மம் மட்டும்
இல்லை இன்னும் ஏழேழு
ஜென்மம் எடுத்தாலும்
நீ தான் என் தங்கை

காலங்கள் கடந்தாலும்
என் தங்கைக்கு என்
இதயத்தில் எப்போதும்
தனி இடம் உண்டு

கண்கள் அழவில்ல
இதயம் அழுகிறது தங்கை
திருமணமாகி செல்கையில்
Posted by: Luminous
« on: January 26, 2026, 10:37:14 PM »

கேள்வியாக நிற்கும் அண்ணன்–தங்கை
ஒரு அண்ணன்…
ஒரு தங்கை…
இன்னும் உலகம் என்னவென்று
முழுசாக அறியாத
சின்னச் சின்ன பிஞ்சுகள்.
அவர்களுக்கான உலகம்
புத்தகம் இல்லை.
பள்ளி இல்லை.
அப்பாவும் அம்மாவும் தான்.
அந்த அப்பாவும் அம்மாவும்
காதலித்தவர்கள்.
வேறு மதம்…
ஆனால்
ஒரே மனிதம்.
இரண்டு வீடுகள்
ஒப்புதல் சொல்லவில்லை.
“நம்மால் மாற்ற முடியாத விஷயம்” என்று
மௌனமாகத் தள்ளிவிட்டு,
ஊரைவிட்டு ஒதுங்கி,
யாருக்கும் இடையூறு இல்லாமல்,அவர்கள்
அமைதியைத் தேடி
வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
ஆனால்…
அமைதி சிலருக்கு
பொறுக்கவில்லை.
அரசியலுக்காக,
அதிகாரத்துக்காக,
மதத்தின் பெயரை
ஆயுதமாக மாற்றிய
சில குள்ள நரிகள்
அந்த வீட்டை ஆடின.
ஒரு இரவு…இருள்,கத்தல்கள்,ரத்தம்
இரு உயிர்கள் அணைந்தன.
அப்போது
ஒரு கேள்வி எழுந்தது.
மதம் காப்பாற்றப்பட்டதா?
ஜாதி உயர்ந்ததா?
இல்லை…
ஒரு அண்ணனும்
ஒரு தங்கையும் மட்டும்
அநாதைகளானார்கள்.
அந்த நாளிலிருந்து
அந்த அண்ணன், தங்கை
தெருவின் ஓரத்தில்
மனிதர்களை நோக்கி
கேள்வியாக
உட்கார்ந்திருந்தார்கள்.
“எதற்கு எங்கள் அப்பா அம்மா சாகணும்?”
பதில் இல்லை.
அமைதி மட்டும்.
ஒரு நாள் மழை.
சிக்னலில் நின்றிருந்த கார்கள்.
அந்த தங்கை
தன் அண்ணனின் கையை இறுக்கப் பிடித்துக்கொண்டு
ஓரமாய் நின்றாள்.
ஒரு கார் நின்றது.
உள்ளிருந்து
ஒரு அம்மா
தன் குழந்தையை
மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த காட்சியைப் பார்த்த
இந்தச் சின்னத் தங்கை
மழையில் நனைந்த
கண்களோடு
மெதுவாக சொன்னாள்
“நம்ம அம்மாவும்
நம்மள இப்படித்தான் பிடிப்பாங்க…மழை வரும்போது.”
தங்கை கேட்டாள்,
“அம்மா எங்க?”
அவன் பதில் சொல்லவில்லை.
அண்ணன்
தன் கையில் இருந்த
குட்டி குட்டி ரேகைகளை
அமைதியாகப் பார்த்தான்.
அந்த ரேகைகளில்
அப்பாவின் விரல்கள் மட்டும் இல்லை…
அவன் தூக்கிய நாட்கள் இருந்தது.
அம்மாவின் அரவணைப்பு மட்டும் இல்லை…
அவள் துடைத்த கண்ணீர் இருந்தது.
அந்த கைகளில்
ஒரு வீடு இருந்தது.
ஒரு உலகம் இருந்தது.
ஆனால்…
இப்போ
அந்த உலகம்
ஒரு மதத்தின் பெயரில்
மண்ணுக்குள் தள்ளப்பட்ட
மௌனக் கதையாக
மாறிப் போயிருந்தது.
அவர்கள் சாகவில்லை…
அவர்கள் சாகடிக்கப்பட்டார்கள்.
யாரால்?
மதத்தால்?
ஜாதியால்?
அரசியலால்?
இல்லை…
மனிதத்தை விட
அடையாளத்தை
பெரிதாக்கிய
மனங்களால்.
எப்போது மாறும் இந்த நிலை?
யார் மாற்றுவது?
நான் நினைத்தால் மாறுமா?
நீ நினைத்தால் மாறுமா?
ஒருவேளை…
அந்த மழையில்
எதையும் கேட்காமல் நின்ற அண்ணன், தங்கையின்
கண்களில் ஒரு நிமிடம்
நம் பார்வை
தடுமாறினால் போதும்…
நம் மனசுக்குள்ள
ஒளிந்து கிடக்கும்
மதமும்,
ஜாதியும்,
அடையாளங்களும்
மௌனமாக
உதிர ஆரம்பிக்கும்.
நாம் நினைத்தால்தான்......
அன்று முதல்
மதம் ஒரு அடையாளமாக
இருக்கும்.
மனிதம் மட்டும்
முதன்மையாக.

LUMINOUS 😇💜✌🙏💐
Posted by: Sethu
« on: January 26, 2026, 10:36:16 PM »


தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...
அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...
'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...
அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...
தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது
தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்

அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...
அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...
தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...
திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ ஆயிரம் சண்டை வந்தாலும்
விட்டு கொடுக்காத ஒரே
உறவு அண்ணன் தங்கை
உறவு மட்டுமே

மனம் விட்டு பேச
ஒரு நல்ல அண்ணன்
கிடைத்தால் அதுவும்
தாயின் மடிதான்இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்
[ அழுதால் துடைக்கும்
சிரித்தாள் தட்டும்
செல்லமாய்க் குட்டும்
பாசக்கை தங்கை

டேய் அண்ணா எனும்
போதே அதட்டலையும்
அன்பையும் ஒரு சேர
காட்டுவது தங்கை மட்டுமே

வயதால் வளர்ந்தாலும்
தங்கச்சி எப்போதும்
என் தேவதை தான்
இந்த ஜென்மம் மட்டும்
இல்லை இன்னும் ஏழேழு
ஜென்மம் எடுத்தாலும்
நீ தான் என் தங்கை

காலங்கள் கடந்தாலும்
என் தங்கைக்கு என்
இதயத்தில் எப்போதும்
தனி இடம் உண்டு

கண்கள் அழவில்ல
இதயம் அழுகிறது தங்கை
திருமணமாகி செல்கையில்
Posted by: Shreya
« on: January 26, 2026, 10:33:19 PM »

                                                   பாச மலர்!!

உன் விரல் பிடித்து பள்ளிக்கு சென்ற காலம் அது
இன்றும் நினைவிருக்கிறது..
வீட்டுக்கு வந்ததும் அந்த டெலிவிஷன் ரிமோட்டிற்காக
தினம் ஒரு யுத்தமே நடக்கும் நம்மிடையே..
அடிதடி முட்றிப் போய் கோபத்தில் உன்னை கடித்தேனே
என் பற்களின் தடம் உன் கையில் ஆழமாய் பதியும்...
அதற்காக அம்மாவிடம் நான் வாங்கிய அடிகள் ஏராளம்..!

கடைக்கு செல்ல சொன்னால் நீ அசைந்து கொடுக்க மாட்டாய்
உன் வேலையையும் நான் செய்த போது பொங்கியது ஆத்திரம்,
ஆனாலும்... அக்காவை விட என்மேல் ஒரு தனி பாசம்
உன் மௌனமான செயல்களில் நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன்..!

என் தோழர்களுக்கெல்லாம் உன்னை கண்டாலே சிம்ம சொப்பனம்
யாரும் அறியாமல் உனக்கு “ஹிட்லர்” என பெயர் வைத்தோம்!
என் முதல் காதலை நீ மிரட்டி முடித்து வைத்த போது
உன் மேல் வந்த வெறுப்பை விட,
நீ என் மேல் வைத்து இருந்த அக்கறையை ​உணர்ந்தேன்..!

கல்லூரி செல்லும் அவசரத்திலும் என்னை இறக்கி விட நீ வந்ததும்
பிரேக் வயரை கையால் பிடித்து விபத்தில் நம்மை மீட்டாயே...
அன்று உன் சமயோசித புத்தியை கண்டு மிரண்டு போனேன்.
யாரோ ஒருவன் என்னை அசிங்கமாய் கிண்டல் செய்ய
அழுது கொண்டிருந்தேன் அம்மாவிடம்..
“இரு வரேன்” என ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு
அவனை தேடி சென்று நீ கொடுத்த அடியும் பதிலடியும்...
அங்கே தான் அண்ணா, உன் அன்பு என்னை தாக்கியது..!

அம்மா மேல் நீ வைத்திருந்த உயிரான பாசமும்
ஆபீஸ் போகும் போதும் அம்மா உனக்கு ஊட்டி விட்டதும்...
ஓர கண்ணால் பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன்!
“அவன் மட்டும் தான் உனக்கு புள்ளையா?”
என அம்மாவிடம் சண்டை போட்டுக்
ஊட்டி விட சொன்னது ஒரு காலம்..
நண்பர்களை வீட்டு வாசலோடு நிறுத்தும் உன் அந்த தெளிவு
இன்றும் என் மனதில் ஒரு பெருமிதமான பாடமாய் இருக்கிறது..!

ஊரில் உன் அந்த முதல் நடனம்...
ஒட்டுமொத்த தெருவும் கைதட்டிய போது உன் தங்கையாய
ஒரு பெருமிதம் உன் திறமை கண்டு!
“ட்ரெஸ் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என நீ சரி செய்யும் போது
உன் அக்கறையில் ஒரு தகப்பனை நான் கண்டிருக்கிறேன்..!

நீ எனக்காக முதன் முதலாக வாங்கித் தந்த அந்த 1100 மொபைலும்...
எப்போதும் ஆனாலும் நீ செக் செய்த போது
கோபம் வந்தாலும்,
அதற்கு பின்னால் இருந்த உன் பயம் எனக்கு புரிந்தது..!

நீ பாட ஆரம்பித்ததில் இருந்து
நான் இன்றும் உனது தீவிர ரசிகை தான் அண்ணா!
அக்கா திருமண மேடையில் நீ பாடிய அந்த நொடிகள்
என் வாழ்வின் அழகான பக்கங்கள்..
நீ வாங்கித் தந்த அந்த முதல் புடவை இன்னும் இருக்கிறது
உன் நினைவுகளை தாங்கியபடி என் அலமாரியில்..!

நண்பர்களோடு திருமணத்திற்கு செல்கிறேன் என பொய் சொல்லி விட்டு
விபத்தில் கை ஒடிந்து வந்த போது என் கோபம்
உன்னை பார்த்த மறு நொடி கரைந்தது..
உன்னை வண்டியில் வைத்து நான் அழைத்து சென்ற போது
“தங்கச்சி நல்லா ஓட்டுறியே” என நீ சொன்ன அந்த ஒற்றை பாராட்டு...
காலங்கள் ஓடினாலும் இன்றும் அது என் நினைவில்..!

அன்று வாங்கிய அந்த பழைய பிளாக் காரில் பயணித்த சுகம்
இன்று நீ வைத்திருக்கும் காரிலும் மாறவே இல்லை!
ஒரு சின்ன சண்டையில் “என்னை நீ புரியவில்லையே” என
உனக்காக என் உயிரையே விட துணிந்தேனே...
உன் மேல் இருந்த கோபமல்ல அது... என்னை நீ தவறாய்
நினைத்து விடக் கூடாதென்ற அந்த பெரும் வலி..!

முதல் முறை உன்னை பிரிந்து நான் சென்ற போது
கல் போன்ற உன் கண்களில் வழிந்த அந்த கண்ணீர்...
அன்றே என் உயிர் ஒரு நொடி பிரிந்து போனது அண்ணா!
இன்று நாம் பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும்
மனதில் உன் நிழல் அப்படியே தான் இருக்கிறது..!

மீண்டும் ஒரு முறை உன்னை நேரில் பார்த்தால் போதும்..
அப்படியே ஓடி வந்து உன்னை கட்டிக்கொள்ள வேண்டும்!
“ஏண்டா இத்தனை நாள் பேசல?” என உன்னை கோபித்து
உன் மார்பில் சாய்ந்து அழுது தீர்க்க வேண்டும்!
ஆயிரம் கோபங்கள் இருந்தாலும்... உன் தங்கை இன்றும்
உன் அதே சின்ன பெண் தான்... உன் அன்பிற்காக ஏங்குபவள்!!
Posted by: Forum
« on: January 25, 2026, 11:08:27 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Updated on November 2025:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 80 வார்த்தைகளுக்கு   குறையாமலும் ,  300 வார்த்தைகளுக்கு   மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 396

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்