Posted by: KS Saravanan
« on: Today at 04:30:36 PM »கண்ணாடி சிறகுகள்..!
அறிமுகம் எனும் ஆரம்பத்தில்
நாம் இருவரும் வெறும் புழுக்களே
தவிப்புகளின் நேரத்தில்
ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டோம்
உன் மனக்கண்ணாடியின் பிம்பத்தில்
நான் ஒரு வண்ணத்துப்பூச்சியானேன்..!
என் உலகத்தில் நீ வந்த அந்த நொடி
எனக்குள் காதல் சிறகுகள் முளைத்தன
ஆரம்பம் முழுவதும் ஒரு கனவுபோல்
சிறகுகள் வண்ணங்களால் நிறைந்தன..!
எவ்வளவு தூரம் நடந்தோம் என்பதே தெரியவில்லை
காதலின் பாரம் ஒருபோதும் வலிக்கவில்லை
பிரிவு என்ற முடிவு வரும்வரை
நாம் சிறகடிக்கப் பிறந்தவர்கள் என்றே நம்பினோம்..!
ஒரு பயணம் முடியும் போதுதான்
அதன் உண்மையான ஆழம் புரிகிறதோ
முடிவு என்பது உறவின் பிரிவாகி
நினைவுகளின் தொடக்கமோ..!
அன்று நான் கண்ட நம் பிம்பமும் பொய்யல்ல
இன்று நீ விலகிச் செல்வதும் பொய்யல்ல
கண்ணாடியில் நான் கண்ட அந்த அழகிய உருவம்
மீண்டும் கிடைக்குமா என மனம் ஏங்குகிறது..!
கண்ணாடி சொல்லாத சில உண்மைகள்
மனசுக்குள்ளே மட்டும் ஒலிக்குது
புழுவாக இருந்த காலத்தை நினைத்தால்
வண்ணத்துப்பூச்சியான கனவு வலிக்குது..!
சிறகுகள் இருந்தும்
பறக்க முடியாத சில நொடிகள்
அந்த நொடிகளில் மௌனம் கூட
சத்தமாய் பேசுது..!
முடிவென்று ஒன்றில்லை என்று தெரிந்தும்
மனம் அதை ஏற்க மறுக்குது
ஏனெனில் இந்த முடிவில்தான்
மற்றொரு ஆரம்பத்தின் விதை இருக்குது..!
காலம் பல கடந்து இந்த நினைவுகளே
என்னை மாற்றும் பிம்பமாக
மீண்டும் ஒரு நான் தொடர்வேன் ஆனால்
புழுவாக அல்ல வண்ணத்துப்பூச்சியும் அல்ல
என்னை நான் கண்டுகொள்ள
கண்ணாடி சிறகுகளாய் என் பயணம்
இது முடிவல்ல
என்னை நானே சந்திக்கும் இன்னொரு ஆரம்பம்..!
அறிமுகம் எனும் ஆரம்பத்தில்
நாம் இருவரும் வெறும் புழுக்களே
தவிப்புகளின் நேரத்தில்
ஒருவரை ஒருவர் தாங்கிக்கொண்டோம்
உன் மனக்கண்ணாடியின் பிம்பத்தில்
நான் ஒரு வண்ணத்துப்பூச்சியானேன்..!
என் உலகத்தில் நீ வந்த அந்த நொடி
எனக்குள் காதல் சிறகுகள் முளைத்தன
ஆரம்பம் முழுவதும் ஒரு கனவுபோல்
சிறகுகள் வண்ணங்களால் நிறைந்தன..!
எவ்வளவு தூரம் நடந்தோம் என்பதே தெரியவில்லை
காதலின் பாரம் ஒருபோதும் வலிக்கவில்லை
பிரிவு என்ற முடிவு வரும்வரை
நாம் சிறகடிக்கப் பிறந்தவர்கள் என்றே நம்பினோம்..!
ஒரு பயணம் முடியும் போதுதான்
அதன் உண்மையான ஆழம் புரிகிறதோ
முடிவு என்பது உறவின் பிரிவாகி
நினைவுகளின் தொடக்கமோ..!
அன்று நான் கண்ட நம் பிம்பமும் பொய்யல்ல
இன்று நீ விலகிச் செல்வதும் பொய்யல்ல
கண்ணாடியில் நான் கண்ட அந்த அழகிய உருவம்
மீண்டும் கிடைக்குமா என மனம் ஏங்குகிறது..!
கண்ணாடி சொல்லாத சில உண்மைகள்
மனசுக்குள்ளே மட்டும் ஒலிக்குது
புழுவாக இருந்த காலத்தை நினைத்தால்
வண்ணத்துப்பூச்சியான கனவு வலிக்குது..!
சிறகுகள் இருந்தும்
பறக்க முடியாத சில நொடிகள்
அந்த நொடிகளில் மௌனம் கூட
சத்தமாய் பேசுது..!
முடிவென்று ஒன்றில்லை என்று தெரிந்தும்
மனம் அதை ஏற்க மறுக்குது
ஏனெனில் இந்த முடிவில்தான்
மற்றொரு ஆரம்பத்தின் விதை இருக்குது..!
காலம் பல கடந்து இந்த நினைவுகளே
என்னை மாற்றும் பிம்பமாக
மீண்டும் ஒரு நான் தொடர்வேன் ஆனால்
புழுவாக அல்ல வண்ணத்துப்பூச்சியும் அல்ல
என்னை நான் கண்டுகொள்ள
கண்ணாடி சிறகுகளாய் என் பயணம்
இது முடிவல்ல
என்னை நானே சந்திக்கும் இன்னொரு ஆரம்பம்..!

