Posted by: joker
« on: Today at 12:00:25 AM »உதிர்ந்தது பூவா?
அல்லது
அதன் மேல் விழுந்த நம்பிக்கையா?
ஒரு மென்மையான இதழ்
காலத்தின் விரல்களில் நசுங்கிக்
கீழே விழும் அந்தத் தருணத்தில்
யாரோ சொல்கிறார்கள் —
“பூ உதிர்ந்தது…”
ஆனால் பூ சொல்கிறது —
“புதிய உயிருக்கு நான் விதை ஆயிற்றே!” என
பெண்ணின் வாழ்வும் அப்படித்தான்…
அவள் பார்க்கையில்
ஒரு மெல்லிய புன்னகை துளிர்க்கும்,
ஆனால்
சில நேரங்களில் அவளின் மௌனம்
காற்றின் வேதனைப் போல
சுற்றத்தில் சொல்லாத சுமைகளை
தாங்கிக்கொண்டிருக்கும்
அந்த புன்னகையின் பின்னால்
நிறைந்து கிடக்கும் ஆயிரம் கதைகளை
ஆண்கள் பலரும் கவனிப்பதே இல்லை
அவளின் கண்கள் பேசும் மொழி
மறைந்த பல அர்த்தங்கள் கொண்டவை
அதைத் உணர்ந்த ஆண்கள் சிலர்,
அதில் தஞ்சம் தேடும் ஆண்கள் சிலர்,
அதில் வீழ்ந்து காணாமல் போகும் ஆண்கள் பலர்
அவளின் காதல்
தென்றல் போல உங்கள்
காயங்களை போக்கும்
உள்ளன்போடு அணுகினால்
படர்ந்திடும் வாழ்வில்
ஆலம் விழுதுபோல்
பெண்ணின் வாழ்கையில்
ஆணின் காதல் சில நேரம்
வானில் பறந்துகொண்டிருக்கும் மழை மேகம்போல்
திடீரென வந்து,
துளியாகத் தொடந்து,
சில கணங்களில் நின்றுபோக கூடும்
பெண்
காதலிக்கையில்
ஆண்கள் விழுவது
அவளின் நம்பிக்கையில்,
அவளின் அமைதியில்
அவளின் அன்பில்
அவள் மனம் திறக்கையில்
உலகமே புதியதாய் தோன்றும்;
அவள் மனம் உடைந்தால்
உலகமே உடைந்ததாய் தோன்றும்.
அவளின் காதல்
அது ஒரு துவக்கம்
முடிவில்லா பயணம்
சொல்ல சொல்ல
வார்த்தைகள் குறையும்
உணர்ந்தவர்களின் வாழ்க்கையோ
நிறைவடையும்
****JOKER***
அல்லது
அதன் மேல் விழுந்த நம்பிக்கையா?
ஒரு மென்மையான இதழ்
காலத்தின் விரல்களில் நசுங்கிக்
கீழே விழும் அந்தத் தருணத்தில்
யாரோ சொல்கிறார்கள் —
“பூ உதிர்ந்தது…”
ஆனால் பூ சொல்கிறது —
“புதிய உயிருக்கு நான் விதை ஆயிற்றே!” என
பெண்ணின் வாழ்வும் அப்படித்தான்…
அவள் பார்க்கையில்
ஒரு மெல்லிய புன்னகை துளிர்க்கும்,
ஆனால்
சில நேரங்களில் அவளின் மௌனம்
காற்றின் வேதனைப் போல
சுற்றத்தில் சொல்லாத சுமைகளை
தாங்கிக்கொண்டிருக்கும்
அந்த புன்னகையின் பின்னால்
நிறைந்து கிடக்கும் ஆயிரம் கதைகளை
ஆண்கள் பலரும் கவனிப்பதே இல்லை
அவளின் கண்கள் பேசும் மொழி
மறைந்த பல அர்த்தங்கள் கொண்டவை
அதைத் உணர்ந்த ஆண்கள் சிலர்,
அதில் தஞ்சம் தேடும் ஆண்கள் சிலர்,
அதில் வீழ்ந்து காணாமல் போகும் ஆண்கள் பலர்
அவளின் காதல்
தென்றல் போல உங்கள்
காயங்களை போக்கும்
உள்ளன்போடு அணுகினால்
படர்ந்திடும் வாழ்வில்
ஆலம் விழுதுபோல்
பெண்ணின் வாழ்கையில்
ஆணின் காதல் சில நேரம்
வானில் பறந்துகொண்டிருக்கும் மழை மேகம்போல்
திடீரென வந்து,
துளியாகத் தொடந்து,
சில கணங்களில் நின்றுபோக கூடும்
பெண்
காதலிக்கையில்
ஆண்கள் விழுவது
அவளின் நம்பிக்கையில்,
அவளின் அமைதியில்
அவளின் அன்பில்
அவள் மனம் திறக்கையில்
உலகமே புதியதாய் தோன்றும்;
அவள் மனம் உடைந்தால்
உலகமே உடைந்ததாய் தோன்றும்.
அவளின் காதல்
அது ஒரு துவக்கம்
முடிவில்லா பயணம்
சொல்ல சொல்ல
வார்த்தைகள் குறையும்
உணர்ந்தவர்களின் வாழ்க்கையோ
நிறைவடையும்
****JOKER***

