Posted by: SweeTie
« on: Today at 02:32:53 AM » மந்திரங்கள் ஓத நாதஸ்வரம் முழங்க
கெட்டிமேளம் கெட்டிமேளம் என
குரலொன்று கூச்சலிட
கட்டினான் மணவாளன்
மாங்கல்யம் எனும் மங்கலநாண்
முடிந்துவிட்ட சேலையும் வேஷ்டியும்
அவிழ்ந்து விடாது முடிச்சுகள் போட்டு
பெற்றாரும் உற்றாரும் ஆசீர் விதிக்க
முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக
அரங்கேறும் ஆனந்த நாள்
மங்கையவள் வாழ்வில் திருநாள்
சுதந்திரமாய் திரிந்தவளை
சுமைதாங்கி ஆக்கிய நன்னாள்
வாழ்க்கையின் பொறுப்புகளை
தலைமேல் சுமத்திய பெருநாள்
தந்தையின் பொறுப்புகளை
தாரை வாற்று கைமாற்றும் தருணம்
தந்தை மகள் உறவின் நெருக்கத்தில்
விரிசல்களை உணர்த்தும் தந்தையின்
ஆனந்த கண்ணீர் துளிகள்
காதலென்ற காட்சியின் கனவுகள்
நனவாகுமா இல்லை கானல்நீராகுமா.
போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பூச்சாண்டிகளின்
நிறங்கள் வெளிறும் தருணம்
கண்ணே பொன்னே காணாமல் போய்விடுமா
இடம்விட்டு பிடுங்கி நடப்படும் செடிகள்
துளிர்ப்பதும் பூப்பதும் காய்ப்பதுமாய்
உள்ளக்குமுறல்களை உள்ளடக்கி
நாடக மேடையில் ந டிக்கவேண்டிய கட்டம்
நாளடைவில் பழகிவிடும் ஆட்டம
காலப் புத்தகத்தின் அத்தியாயங்கள்
கரை புரண்டோட காத்திருக்கும் பக்கங்கள்
கிழிந்து சின்னா பின்னமாகிவிடுமா இல்லை
அழியாத ஓவியங்களுடன் கவிதைகள் ஆகுமா
காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்
கெட்டிமேளம் கெட்டிமேளம் என
குரலொன்று கூச்சலிட
கட்டினான் மணவாளன்
மாங்கல்யம் எனும் மங்கலநாண்
முடிந்துவிட்ட சேலையும் வேஷ்டியும்
அவிழ்ந்து விடாது முடிச்சுகள் போட்டு
பெற்றாரும் உற்றாரும் ஆசீர் விதிக்க
முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக
அரங்கேறும் ஆனந்த நாள்
மங்கையவள் வாழ்வில் திருநாள்
சுதந்திரமாய் திரிந்தவளை
சுமைதாங்கி ஆக்கிய நன்னாள்
வாழ்க்கையின் பொறுப்புகளை
தலைமேல் சுமத்திய பெருநாள்
தந்தையின் பொறுப்புகளை
தாரை வாற்று கைமாற்றும் தருணம்
தந்தை மகள் உறவின் நெருக்கத்தில்
விரிசல்களை உணர்த்தும் தந்தையின்
ஆனந்த கண்ணீர் துளிகள்
காதலென்ற காட்சியின் கனவுகள்
நனவாகுமா இல்லை கானல்நீராகுமா.
போர்வைக்குள் ஒளிந்திருக்கும் பூச்சாண்டிகளின்
நிறங்கள் வெளிறும் தருணம்
கண்ணே பொன்னே காணாமல் போய்விடுமா
இடம்விட்டு பிடுங்கி நடப்படும் செடிகள்
துளிர்ப்பதும் பூப்பதும் காய்ப்பதுமாய்
உள்ளக்குமுறல்களை உள்ளடக்கி
நாடக மேடையில் ந டிக்கவேண்டிய கட்டம்
நாளடைவில் பழகிவிடும் ஆட்டம
காலப் புத்தகத்தின் அத்தியாயங்கள்
கரை புரண்டோட காத்திருக்கும் பக்கங்கள்
கிழிந்து சின்னா பின்னமாகிவிடுமா இல்லை
அழியாத ஓவியங்களுடன் கவிதைகள் ஆகுமா
காத்திருங்கள் காலம் பதில் சொல்லும்

