Posted by: Yazhini
« on: Today at 04:52:24 AM »அழகான காதல் ஓவியம்
நம் திருமண நிழற்படம்...
உன் கரம்பற்றிய நினைவுகளை
மீண்டும் ஒருமுறை புரட்டி பார்க்கிறேன்...
தங்கு தடையில்லாமல் அழகாக
தொடங்கியது நம் காதல் கதை.
உன்னை விட்டு விலகிவிலகி சென்ற போதும்
விரட்டி விரட்டி காதல் செய்தாய்
உன் அதீத அன்பினால் வசிகரித்தாய்..
கடல் தேடி பாயும் நதிபோல்
உன்னை தேடி வர செய்தாய்
சுற்றம் மறந்து முற்றும் மறந்து
உன்னில் தஞ்சம் கொண்டது பேதையுள்ளம்..
உன் நினைவுகளில் மூழ்கிய
என்னை மீட்க - உன்னில்
புதைய சித்தமானேன்....
சித்திரை பூக்களின் மணமுடன்
திருமணத்தில் மனமும் மணக்க...
வற்றா ஜீவஊற்றாய் அன்பும் வழிந்தோட
இரு உயிர்களின் முக்காலத்தையும்
ஒன்றாக பிணைக்கும் மூன்று முடிச்சு
முடிவடையா உணர்வுகளின் நீர் ஊற்று.
உன் கைப்பிடிக்குள் அன்னையின்
கதகதப்பை உணர்ந்திட
மகிழ்ச்சியில் புன்னகையுடன் கண்ணீரும்
சிறிது கலந்து உறவாடியது...
நீயே என் பாதி
என மனமும் மண்டியிட்டது...
எண்ணிலடங்கா நினைவுகளின் பொக்கிஷம்
நாம் அன்பால் இணைந்த திருமண புகைப்படம்... 💜 💜 💜
நம் திருமண நிழற்படம்...
உன் கரம்பற்றிய நினைவுகளை
மீண்டும் ஒருமுறை புரட்டி பார்க்கிறேன்...
தங்கு தடையில்லாமல் அழகாக
தொடங்கியது நம் காதல் கதை.
உன்னை விட்டு விலகிவிலகி சென்ற போதும்
விரட்டி விரட்டி காதல் செய்தாய்
உன் அதீத அன்பினால் வசிகரித்தாய்..
கடல் தேடி பாயும் நதிபோல்
உன்னை தேடி வர செய்தாய்
சுற்றம் மறந்து முற்றும் மறந்து
உன்னில் தஞ்சம் கொண்டது பேதையுள்ளம்..
உன் நினைவுகளில் மூழ்கிய
என்னை மீட்க - உன்னில்
புதைய சித்தமானேன்....
சித்திரை பூக்களின் மணமுடன்
திருமணத்தில் மனமும் மணக்க...
வற்றா ஜீவஊற்றாய் அன்பும் வழிந்தோட
இரு உயிர்களின் முக்காலத்தையும்
ஒன்றாக பிணைக்கும் மூன்று முடிச்சு
முடிவடையா உணர்வுகளின் நீர் ஊற்று.
உன் கைப்பிடிக்குள் அன்னையின்
கதகதப்பை உணர்ந்திட
மகிழ்ச்சியில் புன்னகையுடன் கண்ணீரும்
சிறிது கலந்து உறவாடியது...
நீயே என் பாதி
என மனமும் மண்டியிட்டது...
எண்ணிலடங்கா நினைவுகளின் பொக்கிஷம்
நாம் அன்பால் இணைந்த திருமண புகைப்படம்... 💜 💜 💜

