Posted by: TiNu
« on: June 09, 2025, 08:11:15 PM »கண்களில் கோபம் கொப்பளித்து தெறிக்க..
வீறு கொண்டு எழும், பரியின் மீது அமர்ந்து...
சீறி பாய்ந்து பகைவனை அளித்திடும்.. இவன் யாரோ..
என் புற கண்களுக்கு தெரியும்.. இவன் முகம்
என் அக கண்களுக்கு மட்டும் ஏனோ யார்..
யாராகவோ.. புலப்பட்டு மறைகிறார்களே.
எதிரிகளின் வியூகத்தை அடித்து உடைத்து...
சுற்றி வளைக்கும்.. வீரர்களை.. தந்திரத்தால் .ஏமாற்றி..
எதிரியின் தலை கொய்யா துடிப்பவன் இவனோ..
செந்நிற உடையணிந்த.. தன் தலைவியை
அவளின் பிறந்த அரண்மனையில் இருந்து..
கடத்தி செல்லும் நளமகாராஜா.. இவனோ..
தான் தன் திறமைகளை கொட்டி பயிற்சி கொடுத்த
வீரர்களை.. போர்க்களம் காண.. வீர முழக்கத்துடன்
அழைத்து செல்லும் சேனை தலைவன்.. இவனோ..
தன் ராஜ்ஜியம் மீது வீண் படையெடுத்து வரும்
எதிரிகளை அடக்க.., தன் காலர் படை மட்டும்..
போதுமென.. கம்பீர நடைபோடும் தலைவன். இவனோ..
தன் சாம்ராஜ்யத்தை வணிகத்தையும் விரிவாக..
தன் உருவேற்றிய சேனைகளோடு.. தலைநிமிர்ந்து..
செருக்குடனே வீர நடை போடும் ராஜ ராஜன்.. இவனோ..
இவையாவும் நம் கற்பனையே... எல்லாமே.. கற்பனையே...
நிஜம் எதுவென யாரும் அறியார்....என்
மன கண்களுக்கு புலப்படுவது.. எதுவெனில்...
நம் மனதை ஆட்டிப்படைக்க நினைக்கும்...
கோபம், தற்பெருமை, ஆணவம்,பொறாமை...
அறியாமை,நேர்மையற்ற மனநிலை.. நீக்கி..
மேலும் கட்டுப்பாடற்ற மனச்சோர்வு,
சுயநலம், வன்முறை.. காமம்.. அணைத்து..
தீய எண்ணங்களுக்கு.. கடிவாளம் பூட்டி
நன்மை தீமை கலந்த இந்த சமூகத்தை..
புரவியின் மீது கம்பீரமாக.. செருக்குடனே... வருபவன் எவனோ..
அவனே,. இவன்.... புவியாளும்.. நில(புவி)... சூரியன்
வீறு கொண்டு எழும், பரியின் மீது அமர்ந்து...
சீறி பாய்ந்து பகைவனை அளித்திடும்.. இவன் யாரோ..
என் புற கண்களுக்கு தெரியும்.. இவன் முகம்
என் அக கண்களுக்கு மட்டும் ஏனோ யார்..
யாராகவோ.. புலப்பட்டு மறைகிறார்களே.
எதிரிகளின் வியூகத்தை அடித்து உடைத்து...
சுற்றி வளைக்கும்.. வீரர்களை.. தந்திரத்தால் .ஏமாற்றி..
எதிரியின் தலை கொய்யா துடிப்பவன் இவனோ..
செந்நிற உடையணிந்த.. தன் தலைவியை
அவளின் பிறந்த அரண்மனையில் இருந்து..
கடத்தி செல்லும் நளமகாராஜா.. இவனோ..
தான் தன் திறமைகளை கொட்டி பயிற்சி கொடுத்த
வீரர்களை.. போர்க்களம் காண.. வீர முழக்கத்துடன்
அழைத்து செல்லும் சேனை தலைவன்.. இவனோ..
தன் ராஜ்ஜியம் மீது வீண் படையெடுத்து வரும்
எதிரிகளை அடக்க.., தன் காலர் படை மட்டும்..
போதுமென.. கம்பீர நடைபோடும் தலைவன். இவனோ..
தன் சாம்ராஜ்யத்தை வணிகத்தையும் விரிவாக..
தன் உருவேற்றிய சேனைகளோடு.. தலைநிமிர்ந்து..
செருக்குடனே வீர நடை போடும் ராஜ ராஜன்.. இவனோ..
இவையாவும் நம் கற்பனையே... எல்லாமே.. கற்பனையே...
நிஜம் எதுவென யாரும் அறியார்....என்
மன கண்களுக்கு புலப்படுவது.. எதுவெனில்...
நம் மனதை ஆட்டிப்படைக்க நினைக்கும்...
கோபம், தற்பெருமை, ஆணவம்,பொறாமை...
அறியாமை,நேர்மையற்ற மனநிலை.. நீக்கி..
மேலும் கட்டுப்பாடற்ற மனச்சோர்வு,
சுயநலம், வன்முறை.. காமம்.. அணைத்து..
தீய எண்ணங்களுக்கு.. கடிவாளம் பூட்டி
நன்மை தீமை கலந்த இந்த சமூகத்தை..
புரவியின் மீது கம்பீரமாக.. செருக்குடனே... வருபவன் எவனோ..
அவனே,. இவன்.... புவியாளும்.. நில(புவி)... சூரியன்