Posted by: Madhurangi
« on: November 29, 2024, 10:18:32 AM »தாய் தந்தை அகம் மகிழ முகம் பார்த்து குறு நகை புரிந்து ..
தயக்கமின்றி எதிர் பாலின் நட்புதனை உணர்ந்து..
தரணியிலே கவலையின்றி உலா வந்து..
தந்தையவன் அரவணைப்பில் தளிர் நடை பயின்று முதலடி வைத்தது
பேதை பருவம்..
அடக்கமுடன் அறிவையும் சான்றோர்களிடம் பெற ..
கல்வியெனும் செல்வமதை முறையாக பெற..
புத்தக மூட்டை தோள் சுமந்து ..
பள்ளியதில் கனவுகளுடன் முதலடி வைத்தது
பெதும்பை பருவம்..
உடலோடு உணர்வுகளிலும் மாற்றங்கள் பிறக்க..
தாயோடு பாட்டியும் அறிவுரை மொழி பொழிய..
வெட்கமெனும் உணர்ச்சியை இயற்கையும் கற்பிக்க..
பெண்மை எனும் அத்தியாயத்தில் முதலடி வைத்தது.
மடந்தை பருவம்..
பிறந்த வீடு பெருமைகளை சீதனமாக கொண்டு..
புகுந்தகம் சிறக்க சித்தம் கொண்டு..
இல்லற வாழ்க்கை பயில..
மன்னவன் கரம் பற்றி மணவாழ்க்கையில் முதலடி வைத்தது
அரிவை பருவம்..
மங்கையவள் வாழ்க்கையின் அதியுயர் பெருமையாம்..
மண்ணுலகில் சிறந்த பிள்ளைகளை ஈன்று..
மாதாவெனும் ஸ்தானம் பெற்று..
தாய்மை எனும் நிலையில் முதலடி வைப்பது...
தெரிவை பருவம்..
உற்றவருக்கும், உடையவனுக்கும் தோழியாய் தோள் கொடுத்து..
அழகோடு அறிவும் முதிர்ச்சியுறவே..
குடும்பை தலைவி எனும் பொறுப்பில் முதலடி வைப்பது..
பேரிளம் பெண் பருவம்..
பருவங்கள் பல கடந்தாலும்.
பொறுப்புகள் பல ஏற்றாலும்..
உளம் கொண்ட உறுதியும், அன்புமே..
பெண் கொண்ட குணம்..
தயக்கமின்றி எதிர் பாலின் நட்புதனை உணர்ந்து..
தரணியிலே கவலையின்றி உலா வந்து..
தந்தையவன் அரவணைப்பில் தளிர் நடை பயின்று முதலடி வைத்தது
பேதை பருவம்..
அடக்கமுடன் அறிவையும் சான்றோர்களிடம் பெற ..
கல்வியெனும் செல்வமதை முறையாக பெற..
புத்தக மூட்டை தோள் சுமந்து ..
பள்ளியதில் கனவுகளுடன் முதலடி வைத்தது
பெதும்பை பருவம்..
உடலோடு உணர்வுகளிலும் மாற்றங்கள் பிறக்க..
தாயோடு பாட்டியும் அறிவுரை மொழி பொழிய..
வெட்கமெனும் உணர்ச்சியை இயற்கையும் கற்பிக்க..
பெண்மை எனும் அத்தியாயத்தில் முதலடி வைத்தது.
மடந்தை பருவம்..
பிறந்த வீடு பெருமைகளை சீதனமாக கொண்டு..
புகுந்தகம் சிறக்க சித்தம் கொண்டு..
இல்லற வாழ்க்கை பயில..
மன்னவன் கரம் பற்றி மணவாழ்க்கையில் முதலடி வைத்தது
அரிவை பருவம்..
மங்கையவள் வாழ்க்கையின் அதியுயர் பெருமையாம்..
மண்ணுலகில் சிறந்த பிள்ளைகளை ஈன்று..
மாதாவெனும் ஸ்தானம் பெற்று..
தாய்மை எனும் நிலையில் முதலடி வைப்பது...
தெரிவை பருவம்..
உற்றவருக்கும், உடையவனுக்கும் தோழியாய் தோள் கொடுத்து..
அழகோடு அறிவும் முதிர்ச்சியுறவே..
குடும்பை தலைவி எனும் பொறுப்பில் முதலடி வைப்பது..
பேரிளம் பெண் பருவம்..
பருவங்கள் பல கடந்தாலும்.
பொறுப்புகள் பல ஏற்றாலும்..
உளம் கொண்ட உறுதியும், அன்புமே..
பெண் கொண்ட குணம்..