Post reply

Warning: this topic has not been posted in for at least 120 days.
Unless you're sure you want to reply, please consider starting a new topic.

Note: this post will not display until it's been approved by a moderator.

Name:
Email:
Subject:
Message icon:

shortcuts: hit alt+s to submit/post or alt+p to preview


Topic Summary

Posted by: Kavii
« on: October 03, 2024, 02:19:06 PM »


கொலுசு கவிதை !

குழந்தையின் கொலுசு சத்தம் அம்மாவுக்கு:-

தன் குழந்தையின் கொலுசு சத்தம் கேட்டு
ஓடிடும் அவளது பார்வை!
தூக்கத்திலிருந்து தான் குழந்தை விழித்து விட்டது
என்பதை காட்டி கொடுக்கும் மணியோசை !

குழந்தை அதன் பட்டு பாதம் அடியெடுத்து வைத்து
துறு துறு என அங்கும் இங்கும் ஓடி திரியும்போது
எங்கே நீ என் மழலை! என அவள் தவிக்கும்போது
அதன் கொலுசு ஒலி அம்மாவுக்குத் திசை காட்டும் கருவி !
குழந்தையின் சிரிப்புடன் ஓடிவரும் கொலுசு இசை!
ரீங்காரமாய் அவள் மனதை கவரும் மெல்லிசை!

அப்பாவுக்கு – குழந்தையின் கொலுசு சத்தம்  !

கொலுசு அணிந்த தான் பிஞ்சு காலால்
தன் தந்தையின் மார்பை எட்டி உதைக்கயிலே
உலகமே தன் கையில் வந்தது போல ஒரு இன்பம் அவருக்கு!
அவள் தத்தி நடக்கையிலே ! கண்களை உருட்டி சிரிக்கயிலே ! எல்லையில்லா பேரானந்தம் அவருக்கு! 
உலகில் உள்ள எல்லா இசையும் தோற்று போகும் முத்து கொலுசு அணிந்த அவரது மகளின் பிஞ்சு பாத நடையின் ஓசையிலே !

அம்மாவின் கொலுசு சத்தம் - குழந்தைக்கு !

தன் தாயின் கருவறையில் இருக்கும்போதே பழக்கப்பட்ட ஒன்று !
தன் அருகில் தான் இருக்கிறாள் தன் தாய் என்று
நம்பிக்கை தரும் சத்தம் தன் தாயின் கொலுசு சத்தம் !

காதலனுக்கு - காதலியின் கொலுசு சத்தம்!

அவள் வருகையை முன்பே சொல்லிவிடும் சுற்றறிக்கை!
மருதாணியிட்ட காலின் அழகோடு கொலுசின்
அழகும் சேர்ந்து கொள்ள கொலுசால் கால் அழகா !
அவள் காலால் அந்த கொலுசிற்கு அழகா !
என்று ஐயம் எழுகிறது !

அவள் அழகாய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
என் காதில் சிம்பொனிகளாய் ஒலிக்க !
அதன் அதிர்வுகள் என் நெஞ்சில் முத்தமிட்டு என் காதலை
தட்டி எழுப்பி உன்னருகே எனை ஈர்க்கிறது !
வெட்கத்தில் அவள் போடும் கோலங்களுக்கு
நீயும் மௌனமாய் ஒத்துழைக்கிறாய் !
நீ அவளது பாதம் தொட்டதால் !
நான் கூட இன்று கவிஞனாகிவிட்டேன்!

மனைவியின் கொலுசு சத்தம் – கணவனுக்கு :

அவளின் கொலுசு சத்தம் அவன் காதில் காதலை ஊற்றுகிறது!,
சிணுங்கும் அவளது கொலுசு ஒலியில் காதலை இணைக்க,
ஒவ்வொரு சாதங்கையும்சதங்கையும் காதல் இசை பாட !
அவள்  மடியில் அவன்  வீழ்ந்திடும் நேரம்!
அவள் கொலுசின் இசைதான் அவர்கள் வாழ்க்கை சேர்க்கும் மணியாரம் !

அலை பேசி தேவை இல்லை அவனை அழைக்க !
அவள் கொலுசு சத்தம் போதும் !
கொடுத்து வைத்த கொலுசுகள் ! அவனை விட அதிக நேரம்
அவைகள் தானே உறவாடுகிறது அவளோடு !

கொலுசு !
கல்லீரல் ! மண்ணீரல் ! பித்தப்பை, கருப்பை போன்ற முக்கிய உறுப்புகளின் திறனை தூண்டிவிடும் சக்தியும் இந்த கொலுசிற்கு உண்டாம்!

அப்பப்பா ! எத்தனை சிறப்புகள் இந்த வெள்ளி கொலுசுக்கு!

Posted by: Sankari
« on: October 02, 2024, 04:32:20 PM »

 வணக்கம் ! இது என்னுடைய முதல் தமிழ் கவிதை, தவறு இருப்பின் மன்னிக்கவும்...

என் காலின் கொலுசு...

எத்தனை ஞாபகம் உன்னுடன்
குழந்தை பருவத்தில் உன் ஓசையை கேட்டு துள்ளி குதித்த ஞாபகம்
தலைசுற்றும் வரை உன்னோடு சுற்றிய ஞாபகம்

சிறுவயதில் இரவில் உன்னோடு சேர்ந்து மற்றொருவர்களை பயம்புருத்தி சேட்டை செய்த  ஞாபகம்
அந்த நேரத்தில் உன் தாலாட்டில் வாய் விட்டு சிரித்த ஞாபகம்

பாரம்பரியம் தவிர்க்க முடிவெடுத்தேன் அந்த நேரத்தில் உன்னை வெறுத்த ஞாபகம்
இருந்தாலும் சிறு வருடங்களுக்கு பிறகு
இந்த வெளிநாட்டில் என்னை சுற்றியவர்கள் உன்னை நமது கலாச்சாரம் சின்னமாக பார்க்கும் வரையில்
முழு மனதோடு ரசித்த ஞாபகம்

என் பெண்மையை நான் அறிந்ததும் உன்னை  நேசித்த ஞாபகம்
மொத்தத்தில் உன்னோட வளர்ந்த ஞாபகம்
உன்னை நினைத்தால் உன் மேல் ஒரு புரியாத பாசம் நேசம் !

என் காலின் கொலுசு உனக்கு எப்போதும் என் மனத்தில் எடம் உண்டு
உன் ஓசையால் என் இதயதாய் தாலாட்டுகிறாய்
என் காலின் கொலுசு உனை நேசிக்கிறேன்
Posted by: RajKumar
« on: October 02, 2024, 12:40:22 AM »

சுப மங்கள நாளில் மணமகளாய் புகுந்த வீட்டில் அடி வைக்கும் புதுப்பெண்

பெற்றெடுத்த தாய் தந்தை பாசத்தை  பிரிந்து தாய் வீட்டின் நினைவை மனதில் நினைத்து புகுந்த வீடு அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்

பெற்றோரை நினைவிலும் வருங்கால கணவனை இதயத்திலும் குடும்ப சுமையை சுமக்க அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்

தன் வாழ்க்கை அன்றி புகுந்த வீட்டில் உள்ளவர்கள் வாழ்வும் சிறப்பு பெற அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்

தன் ஏற்றும் தீபம் ஓளிமயமாக தானே விளக்காக புகுந்த வீட்டில் ஒளிர அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்

மணப்பெண் கால் பாதம் தரையை முத்தமிட  அவள் கொலுசு மெல்லிசை ஒலிக்க அதிகாலை கணவர் துயில் எழ வைக்க அவன் நித்திரையை கலைக்க மணப்பெண் கொலுசு ஒளிச்சத்தம் உடன் அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்

தன் தந்தையின் பாசத்தை சிறிதும் குறையாமல் கண்வர் இடம் முழுமையாக அப்பாசத்தினை பெற எதிர் நோக்கி அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்

கண்ணில் ஆனந்த கண்ணீருடன் வாயில் புண்ணகையுடன் முகத்தில் நாணம் கலந்த வெக்கத்துடன் தன் தாயிடம் பெற்ற அன்பை புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம் பெற அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்

அவளே எட்டு எடுத்து உள்ளே நுழைந்தால் மணவாழ்வில்
மணமகளாய்


 
Posted by: PreaM
« on: October 01, 2024, 05:16:23 PM »

[அடியே என் அத்தை மகளே
உன் மேல வச்சேன் உசுர
என் மனசுல  பத்தி எரியுது
பாசம் என்னும்  தீயே
உன் அன்ன நடையிலே
நான் பின்னால் தொடருவேன்
அடியே  தங்க இரதமே
நான் கொடுத்த வெள்ளிச் சரமோ
மின்னும் உந்தன் கால் அழகிலே
முத்தமிடும்  கொலுசின் முத்து ஒலியே
உன் நடைக்கு மெட்டுப் போடுதே
என் மனம் பித்தாய் அலையுதே
பூமியும் சுற்றுவதை மறந்துவிடும்
உன் செல்லம் கொஞ்சும் நடையிலே
சின்னச் சின்ன சலங்கை சத்தம்
என் சிந்தனையை சிதறடிக்கும்
அடியே மாமன் மகளே
 மனசுல துள்ளி ஓடிடும்
உன் எண்ணம் அறிவேன்
உன் கண்ணக் குழியிழே
அன்பான முத்தம் பதிப்பேன்
என் அன்பு  ராட்சசியே ...




Posted by: TiNu
« on: October 01, 2024, 04:37:39 PM »


நான் யார் தெரியுமா? நான்... யார்?  தெரியுமா?
உங்களுக்காகவே படைக்கப்பட்ட.. அழகு தேவதை..
உங்களுடனே கை கோர்க்கும்.. ஸ்வர்ண சிங்காரி.. 
ஆண்டவன் படைப்பில் ஆயிரம் இருந்தாலும்...
நானே அவனின் அற்புத படைப்பாவேன்..

துள்ளி நடமாடும் சின்னச்சிறு குழந்தைகள் முதல்..
வாலிபம் கொஞ்சிவிளையாடும் பருவத்திலும்...
நடைதளர்.. நரைவிழுந்த பெரியவர்களை வரை...
எல்லா உயிர்களின் காவல் தெய்வமாவேன்..
நான்யாரென தெரிந்ததா?.. நீவீர் மனம் தெளிந்தீரா.. 

நடைபழகும் குழந்தைகளின் குறிப்பை உணர்த்துபவள்..
பாலின பேதமின்றி.. தேக ஆரோக்கியம்.. காத்து நிற்பவள்..... 
சிலரின் கட்டுக்குள் அடங்க மனநிலையை அடக்கி ஆள்பவள்..
முதியவர்களின் நாடிநரம்புகளை உயிர் ஏற்றுபவள்... 
நான்யாரென தெரிந்ததா?.. நீவீர் மனம் உணர்த்தீரா..   

இது யார்?..  அவராக இருக்குமோ? இல்லை இவளாக?
யார் யார் என்று.  உங்கள் மனதோடும்.. அறிவோடும்..
வீண் சண்டை வேண்டாம். வெட்டி வாதமும் வேண்டாம்..
நான் யாரென்று.. நானே சிறுக சிறுக சொல்கிறேன்...
என் சொல்லின் பொருள் புரிந்து.. நீவீர் தெளிவடைவீராக..

மனித உடலின் உஷ்ணம் தனித்து குளிர செய்பவள்...
பெண்டீர்களின் தேக பிரச்சனைகளை தீர்ப்பவள்..   
பேசத்தொடங்கா குழந்தைகளில் சமிக்கையானவள்...
என் சிரிப்பொலியால்.. எதிர்மறைகதிர்வீச்சை ஒடுக்குபவள்..
நேர்மறைகதிர்வீச்சை மனையெங்கும் அள்ளித்தெளிப்பவள்..

நானே! ஆன்மீக ஒலியெழுப்பி.. சுற்றத்தாரின்   
ஆயுளை நீட்டிக்கும் சலங்கை ஆவேன்..

Posted by: Vethanisha
« on: October 01, 2024, 02:46:51 PM »

💜 முதல் அடி💜

கனவுகள் ஆயிரம் கண்ணில் வளர்த்து
கவலைகள் ஆயிரம் நெஞ்சில் புதைத்து
கேள்விகள் ஆயிரம் மனதில் சுமந்து
புதியதொரு வாழ்வினை  நோக்கி
அவள் வைக்கும் முதல் அடி இது !

அன்பாய் வளர்த்த தாயைப் பிரிந்து
ஆருயிராய் சுமந்த தந்தையைப் பிரிந்து
உடனே வளர்ந்த தமக்கையை பிரிந்து
உறவாய்  நின்ற தமையனை பிரிந்து
புதிதாய் பல உறவுகள் தேடி
அவள் பதிக்கும்  முதல் அடி இது!

புகுந்த இடம் செழிப்பது உன் கையில்
பக்குவமாய் அனுசரித்து வாழ் உன் மனையில்
கணவனே உன் முதல் உறவு மறவாய்
பிறந்த இடம் புகழ் நீ  காப்பாய்
செவி முழுக்க அறிவுரை சுமந்து
அவள் நகர்த்தும்   முதல் அடி இது !

அனைத்தும் புதிதாய் தான் அமைய
எதிர்காலம் புதிராய் தான் இருக்க
என்றும் நம்பிக்கையாய் அவர் இருப்பார் என 
தன்  தயக்கம் நீக்கி தனிமையைத்  துறப்பார் என

அவர் பாதையில்  மீதியாய் ,
உணர்வுகளில் ராணியாய்
தன் அடையாளம் துறவாமல்
காலம் முழுதும் துணைவியாய்
ஒன்றிணைந்து பயணிக்கவே

அவள் வைக்கும்

முதல் அடி இது♥️


 💚 💛

 
Posted by: Madhurangi
« on: October 01, 2024, 01:41:29 PM »

பஞ்சாங்க நாள் பார்த்து..
வதுவை கோலம் கண்டு , கண்ணாளனின்
வலக்கரம் பற்றி அக்கினி வலம்  வந்து
புது தாலி ஏற்றுக்கொண்டாள்
இளம்பெண்ணொருத்தி..

நெற்றித்திலகமும் ,நெஞ்சை தொடும் மங்கள நாணும்
திருமதி கோலத்தை மேலும் அழகாக்க..
பழக்கமில்லா மெட்டி சேலைநுனி இடறி விட ..
வெட்கம் மேலும் செம்மை சேர்த்தது அவள் அழகிய கன்னத்தில்..

கலக்கமுற்ற நடையில் கால்களும் பின்ன
உற்றார்  உறவினர் கேலி பேசி கையசைக்க
பெற்றாரோ கை மறைவில் கண்ணீர் மறைக்க..
புது அகம் நோக்கி பயணித்தால் புதுப்பெண்ணொருத்தி ..

கனவுகள் கருவிழிகளில் மின்ன
கல்யாண கோலம் பூண்ட காரிகையவள்
மாமியார், நாத்தனார் புது உறவுகள் சூழ..
காலடி எடுத்து வைத்தாள் புது மனைதனில்

சமயலறியாதவள் என மாமியார் வைவாரோ?
அண்ணனின் அன்பு தனக்கே  என நாத்தனார் முரண்படுவாளோ ?
பாழாய்ப்போன சீரியல் கதைகள் எண்ணத்தில் ஓட..
பேதை மனமோ பேதலித்து பலவாறு குழம்ப..

கண்ணசைவில் கலக்கமறிந்த கணவனோ
மாலை மறைவில் கை அழுத்தி..
கண்சிமிட்டி சிரிப்பில் கலக்கம் துடைத்தான்..
தோளோடு கட்டி அணைத்து தோழமையை உணர்வித்து..
நான் இருக்கின்றேன் என சங்கேத மொழி பேசினான்..

காதலோடு தோழமையும் உணர்வித்தவன்..
மௌனமொழியிலே மனதறிந்தவன்
இனிவரும் காலம் யாவும் இந்த இனியவன் துணை
காதலனே கணவனாய் வாய்த்தால் இனியேது வினை ?
Posted by: சாக்ரடீஸ்
« on: October 01, 2024, 11:57:30 AM »







Posted by: Mr.BeaN
« on: September 30, 2024, 07:38:57 PM »

நாள் குறிச்சி நலுங்கு வச்சு
நயமோடு பந்தலிட்டு
ஊரோடு உறவையும்
ஒரு சேர கூட்டி வச்சு
 ஒய்யார மேடையிட்டு
மணப்பெண்ணாய் உனை ஏற்ற
கூறப்பட்டு சேலையிலே
நாணப்பட்டு நீ நடக்க
கால் கொலுசு முத்ததுவும்
காணம் ஒன்னு தான் இசைக்க
கற்கண்டு சிரிப்பதுவும்
காந்தமென கவர்ந்திழுக்க
மருதாணி செவப்போடு
உன் பாதம் தான் மின்ன
மகாராணி தோற்பாலே
உன் அழகில் என் பெண்ணே

Posted by: Forum
« on: September 30, 2024, 01:04:01 PM »

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 357

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.