Posted by: SweeTie
« on: July 04, 2024, 01:13:15 AM »அது பக்கத்துவீட்டு பொன்னம்பலத்தின் ஆவியாய் இருக்குமோ?
எதற்கு நான் போகுமிடமெல்லாம் துரத்துகிறான் ?
என்னை காதலிப்பதாக சொன்னான் நானோ ஏற்றுக்கொள்ளவில்லை
தூக்கிட்டு இறந்துபோனான் என்றல்லவா சொன்னார்கள்
அவன் கால்களை உற்று நோக்குகிறேன்
பேய்களுக்கு கால்க்கள் நிலத்தில் இருக்காது அல்லவா?
இவன் கால்களும் அந்தரத்தில் நிற்பதுபோல்தான் தெரிகிறது
கண்டிப்பாக இவன் பொன்னம்பலத்தின் ஆவிதான் என உறுதிசெய்தேன்
இரவில் என்னால் எங்கும் போகமுடியவில்லையே
பயத்தில் என் கால்கள் நடுங்க ஓட்டம் பிடித்தேன்
சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்கிறேன்
அந்த உருவம் திரும்பி எதிர் திசையில் போகிறது
ஆஹா என்னோடு ஓட்டத்தில் ஜெயிக்க முடியாமல் திரும்பிவிட்டானா ?
எனக்குள்ளே சந்தோசத்தின் எல்லையை காண்கிறேன்
பேய்களுக்கு இரவில்தான் கண் தெரியுமாம் என் நண்பி கூறியது ஞாபகம்
எனது வாய் கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது
சீக்கிரமே வீடுசென்று கட்டிலில் தொப் என விழுந்தேன்
முதல்நாள் படித்த The Haunting Hour. என்ற பயங்கர நாவல்
கட்டிலில் விரித்தபடியே கிடந்தது.
படிக்க படிக்க ஒரு பக்கம் பயம் இருந்தாலும்
புத்தகத்தை மூடி வைக்க முடியவில்லை ....ஆர்வக்கோளாறு
கடைசி பக்கம் படித்து முடிக்கவும் மணி இரவு 12 அடிக்கவும் சரியாக இருந்தது
கதையின் பிரதி பலிப்பா இந்த ஆவி என
என்னை நானே தேற்றிக்கொண்டேன்
பயம் நம்முள் ஏற்படும் பலவீனம் அன்றி வேறில்லை
கண்களை இறுக மூடிக்கொண்ட என்னை
நித்திராதேவி அனைத்த்துக்கொண்டாள்.
எதற்கு நான் போகுமிடமெல்லாம் துரத்துகிறான் ?
என்னை காதலிப்பதாக சொன்னான் நானோ ஏற்றுக்கொள்ளவில்லை
தூக்கிட்டு இறந்துபோனான் என்றல்லவா சொன்னார்கள்
அவன் கால்களை உற்று நோக்குகிறேன்
பேய்களுக்கு கால்க்கள் நிலத்தில் இருக்காது அல்லவா?
இவன் கால்களும் அந்தரத்தில் நிற்பதுபோல்தான் தெரிகிறது
கண்டிப்பாக இவன் பொன்னம்பலத்தின் ஆவிதான் என உறுதிசெய்தேன்
இரவில் என்னால் எங்கும் போகமுடியவில்லையே
பயத்தில் என் கால்கள் நடுங்க ஓட்டம் பிடித்தேன்
சிறிது தூரம் சென்று திரும்பி பார்க்கிறேன்
அந்த உருவம் திரும்பி எதிர் திசையில் போகிறது
ஆஹா என்னோடு ஓட்டத்தில் ஜெயிக்க முடியாமல் திரும்பிவிட்டானா ?
எனக்குள்ளே சந்தோசத்தின் எல்லையை காண்கிறேன்
பேய்களுக்கு இரவில்தான் கண் தெரியுமாம் என் நண்பி கூறியது ஞாபகம்
எனது வாய் கந்தசஷ்டி கவசத்தை முணுமுணுக்க ஆரம்பித்தது
சீக்கிரமே வீடுசென்று கட்டிலில் தொப் என விழுந்தேன்
முதல்நாள் படித்த The Haunting Hour. என்ற பயங்கர நாவல்
கட்டிலில் விரித்தபடியே கிடந்தது.
படிக்க படிக்க ஒரு பக்கம் பயம் இருந்தாலும்
புத்தகத்தை மூடி வைக்க முடியவில்லை ....ஆர்வக்கோளாறு
கடைசி பக்கம் படித்து முடிக்கவும் மணி இரவு 12 அடிக்கவும் சரியாக இருந்தது
கதையின் பிரதி பலிப்பா இந்த ஆவி என
என்னை நானே தேற்றிக்கொண்டேன்
பயம் நம்முள் ஏற்படும் பலவீனம் அன்றி வேறில்லை
கண்களை இறுக மூடிக்கொண்ட என்னை
நித்திராதேவி அனைத்த்துக்கொண்டாள்.