Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 364  (Read 164 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 364

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Ramesh GR

என்றோ காணும் என் நண்பனின் முகம் ஞாபகப்படுத்தும் என் வாழ்நாளின் வசந்த காலத்தை

புது புத்தக பை உடன் ஆசையாய் சென்றது முதல் நாள் பள்ளிக்கு மட்டும் தான்

அன்று தொடங்கி நான் பள்ளி காலம் முடிக்கும் வரை தினமும் காலை ஒரு சோகத்தோடே சென்ற பள்ளி

அன்னை போலவே அன்பு காட்டி தந்தை போல வாழ்க்கையின் முதல் படியில் கால் வைக்க செய்த எனது ஊர் ஒட்டு கட்டிடம் இன்னும் கம்பிரமாக சொல்லும் என் மடியில் தான் முதன் முதலில் நீ தவழ்ந்துதாய் என்று

பென்சிலுக்கு சண்டை போட்ட என் நண்பன்

அவனை சமாதானம் படுத்த நான் கொடுத்த அழகிய லப்பர்


எவ்வளவோ விளையாட்டு இருந்தாலும் மரத்து அடியில் பாடம் நடத்தும் போது மண்ணில் விளையாடும் சுகம் வேறு எந்த விளையாட்டிலும் கிடைக்காது

இவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் பரீட்சை அப்போ கிடைக்கும் அடி இப்பொது நினைத்தாலும் சிரிக்க தோன்றும்

வாசனையை வைத்தே யார் என்ன சாப்பாடு என்று கணித்து திருடி சாப்பிடும் சுகம் 5 ஸ்டார் விடுதியில் கூட கிடைக்காது

அன்பும் கனிவும் கொண்ட தமிழ் ஐயா

என்னை எப்படியாவது தேர்ச்சி பெற வைக்க போராடிய ஆங்கில ஆசிரியை

எப்போதும் என்னை பாரட்டும் கணித ஆசிரியர்

அடித்தல் கூட வலிக்காமல் அடிக்கும் எங்கள் அறிவியல் ஆசிரியர்

சிறு தவறு என்றாலும் தூக்கி போட்டு மிதிக்கும் சமூக அறிவியல் ஆசிரியர்

எப்போதாவது நாங்கள் செல்லும் PT வகுப்பு ஆனாலும் அதிலும் விளையாடியாது இல்லை


இவை அனைத்தும் அழகிய நினைவுகளாக மட்டுமே இருக்கிறது ஒரு ஒரு நிகழ்வும் நினைக்க நினைக்க இனிக்கும் நினைவலைகள்

இன்று கடந்து சென்றால் கூட கண்கள் என் வகுப்பை தேடும் முகத்தில் புன்னகை பூக்கும்

அது என் பள்ளி அன்று அல்ல என்றும் அது என் பள்ளி


« Last Edit: January 28, 2025, 08:08:11 AM by Ramesh GR »

Offline Yazhini

சிறகுகளின்றி பறந்த காலமது!
எச்சில் பண்டம் இனித்தது.
சிந்தும் பேனாமைத் துளி உதவியது.

நித்தம் எழுகையில் போராட்டம்.
வகுப்பறை எங்கும் ஆர்பாட்டம்.
தேர்வு என்றால் திண்டாட்டம் விடுமுறை என்றால் கொண்டாட்டம்..

நண்பர்களின் கைக்கோர்த்து சுற்றிதிரிந்தோம்.
காண்பவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.
சின்னஞ்சிறு விஷயத்திற்கும் பூரிப்படைந்தோம்.

கள்ள கபடமற்ற குழந்தைமனது.
விழுப்புண் அனைத்தும் விருது.
பொறாமையற்ற நண்பர்கள்.
நம் வாழ்வின் நட்சத்திரங்கள்.

பெற்றோரின் அடி ஆசானின் அடி
என அடிகளால் செதுக்கப்பட்டோம்.

அரும்புமீசை முதல்பரு என
நாணம் துளிர்த்த காலமும் அதுவே!
நேர்பார்வை ஓரப்பார்வை ஆனதும்
புன்னகையில் நாணமேறியதும் அங்கேதான்...

இதயத்துடிப்பு காதுகளில் கேட்டதும்
தென்றல் இன்னிசையானதும் அங்கேதான்

வீண்சண்டை வீண்பேச்சு என
எல்லாம் இன்று பொக்கிஷங்கள்.

மெருகேற்றப்பட்ட அறிவும் பயமறியா
பட்டறிவும் வாழ்வின் அச்சாணி...

உலகமே எனது என்றெண்ணிய
என் வசந்த காலமே!
மீண்டும் ஒருமுறை வருவாயா!!!
« Last Edit: February 07, 2025, 03:17:57 AM by Yazhini »

Offline Asthika

அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாத நினைவுகள்
 சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மனதில்
 மகிழ்ச்சியான கனவாய்
 பூத்துக்குலுங்கும் தோட்டமாமாய்
வாழ்க்கைப் பாடங்களை
கற்றுத்தரும் அரங்கமாய்
 என்றும் நீங்காத நினைவுகளாய்
 உலாவி கொண்டிருக்கின்றன..

  தாய் பத்து மாதம் சுமந்து
 இவ்வுலகிற்கு கொண்டுவந்தாலும்
  பன்னிரண்டு ஆண்டுகள் நம்மை
 சுமந்து இவ்வுலகிற்கு..
  பொக்கிஷமாய் அறிமுகப்படுத்துகிறது..
 
 ‌‌ பள்ளி முடிந்தது "மனதில்
பட்டாம்பூச்சி எழும் தருணம்
இவ்வார்த்தை கேட்கும்போது அரைக்கை
சட்டையும் டவுசரும் அணிந்து
சேட்டை செய்யும் வயதில் !
 [புத்தகத்தில் உயிரியல் கற்றோம்
வேதியல் கற்றோம் இயற்பியல்
கற்றோம் கணிதம் கற்றோம்
தோழமையில் மனிதம் கற்றோம்
  கருவறையில் மென்மையாக உருவாகி
வகுப்பறையில் பலம் அடைந்தோம்!
 
  ஈர்ப்பும் இல்லை எதிர்பார்ப்பும் இல்லை
கனவுகள் ஆயிரம் இருந்தும் வழி நடத்த யாரும் இல்லை
கடமைக்கு கல்லூரி
கற்றுவாங்க வகுப்பறை
சோர்வில் தேற்றிவிட தோழி
துன்பத்தை காற்றில் விட தோழன்
ஆண்டுகள் ஓடினாலும்
அடுத்த நொடி பற்றி கவலை இல்லை
வேலைக்கு சென்றாலும்
வியர்வை இன்றி உழைத்தாலும்
கல்லூரி மரத்தடி
நிழல் தரும் சுகம்
வேறெங்கும் கிடைக்காது...

Offline VenMaThI


முதல் நாள் அனுபவம்
மனசுல நெனப்பில்ல
கடைசி நாள் நினைவுகள் - இன்றும்
மனச விட்டு நீங்குது இல்லை

ஏண்டா இங்க வந்தோம்னு
முதல் நாளன்று அழுதுருப்போம்
ஏண்டா முடிஞ்சு போச்சுனு
நாள்தோறும் அழுதுட்டு இருக்கோம்..

தாயின் கருவறை போல் - யாரும்
திரும்பி செல்ல விரும்பும் இடம்
கள்ளங்கபடம் இல்லாமல் என்றும்
நட்பை மட்டுமே வளர்த்த இடம்...

அதட்டி அடித்து கண்டித்தாலும்
அன்பில் தாயை மிஞ்சும் ஆசிரியர்கள்...
கல்வியுடன் கலைகள் பல கற்று
வாழ்வில் உயர உதவிய ஆசான்கள்...

ஜாதி மத பேதமின்றி பல
கடவுள் வாழ்த்து பாடினோம்
ஆண் பெண் என்ற பாகுபாடின்றி
அரட்டை அடித்து ஆர்ப்பரித்தோம்..

ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி
எல்லாரும் சமமென கூடி நின்றோம் ...
அன்பை மட்டுமே அடித்தலமாய் கொண்டு
அனைவரின் மனதிலும் நிலைத்து நின்றோம்...

அடுத்தவர் உணவையும் பகிர்ந்துண்டோம்
அவர்தம் பொருளையும் பகிர்ந்து கொண்டோம்
அடிதடி வந்தாலும் அடுத்த கணமே
அன்பால் அனைவரையும் அரவணைத்தோம் ...

போட்டியைக்கூட புன்சிரிப்புடன் ஏற்று
அடுத்தவர் வெற்றியை கைதட்டி கொண்டாடி
படிப்புடன் சேர்ந்து பண்பையும் வளர்த
இப்பருவம் போல் வேறொன்றும் காணோம்...

மீண்டும் ஒருமுறையேனும்
உடுத்த நினைக்கும் சீருடை
செல்ல நினைக்கும் வகுப்பறை
கேட்க நினைக்கும் அதட்டல்கள்
ஏற்க ஏங்கும் தண்டனைகள் என

நீங்கா நினைவுகளாய் என்றும்
 நிலையாய் நிறைந்திருக்கும்
இந்த பள்ளிப்பருவம் போலொறு பொக்கிஷமும் இல்லை
அந்த வாழ்வுக்கு மிஞ்சிய வரமும் வேறில்லை..........


« Last Edit: Today at 02:01:56 AM by VenMaThI »