நட்சத்திரம் போல ஒளிரும் நீ,
நடந்த பாதையில் நிழலாய் நீ.
சுமைகள் சில வந்தபோதும்,
சுருங்காத காதலாய் நீயிருந்தாய்.
காற்றாய் வந்து கலந்தாய்,
கண்ணீரை சிரிப்பாக்கினாய்.
என் எல்லா நாளும் பரிசாக,
உன் தோளில் தங்கிய காதல் நானாகினேன்.
சாதாரண நாட்களைக் சிறப்பாக்கும்,
சின்ன சிரிப்போடு நெஞ்சை நனைக்கும்,
என் காதலின் உண்மை துணை –
நீயல்லவா?
உன் அருகில்
புயல்கள் வந்தாலும் பயமில்லை,
உன் அருகில் நானிருக்கிறேன்.
உன் கைபிடியில் என்னை மறந்தேன்,
அது தான் காதலின் உண்மையான துணை
நடக்கையில் கைகொடுத்து,
நாளெல்லாம் சிரிக்க வைத்தாய்,
நெஞ்சினுள்ளே உறைந்து விட்டாய்,
நீயின்றி நான் என்பதே இல்லை!
கண்ணில் கனவில் நீயே தோன்ற,
காலம் முழுதும் என்னோடு போனாய்.
உன் சிரிப்பு என் சோகத்தை குறைக்கும்,
உன் மேல் என் நேசம் காலமெல்லாம் நிலைக்கும்.
உன்னால் தான் வாழ்க்கை இனிமை,
ஒவ்வொரு நாளும் ஒரு புது பயணம்.
உன் வார்த்தைகள் உயிர்க்கொடுத்து,
சிலந்தி வீதியில் சாமர்த்தியமாக,
சமாதானம் பேசும் காலடி ஓசை,
உன் தோளில் என் விரல்கள் சாய,
நமது காதல் நேரம் நகர்கிறது மெல்ல.
கூட நடந்த பாதை
வானம் நம்மை ஆசீர்வதிக்க,
மழை துளிகள் கூட இசையாட,
நீயும் நானும் – பேசாமலே,
பார்வையிலே காதலோசை!
அடி ஒவ்வொன்றும் ஒரு நினைவு,
சிரிப்பும் சிந்தனையும் கலந்தது.
உன் அருகில் நடந்த அந்த நிமிடம்,
என் வாழ்நாளின் சிறந்த கவிதை!
கைகளில் கை, கண்ண்களில் கனவு,
வழிகளில் பூவும், வானில் நட்சத்திரமும்,
இருவரும் மட்டும், மற்றவை மாயம்,
என் வழியின் தேடலாக இல்லாமல் என்னை வழிநடத்தும் ஜுவனாக நீயே உள்ளாய் !!!!
இக்கவிதை என் வாழ்க்கை துணைவனுக்கு சமர்ப்பிக்கின்றேன் ❣️❣️❣️❣️