3
« Last post by Mr.BeaN on Today at 01:30:10 PM »
வியர்வை உரமாக்கி
உழப்பை வரமாக்கி
உழவன் மண்ணிற்கும்
அளிக்க
மண் தருதே நெல்கதிரும்
- மஞ்சள்
காதல் மெருகேற
கலந்து உருசேர
மனதை இணைக்கின்ற
பந்தம்
திருமணத்தில் தாலி நிறம்
- மஞ்சள்
கிழக்கில் தான் தோன்றி
மேற்கில் தான் மறைய
குதித்து ஓடி வரும்
பரிதி
அது விரிக்கும் கதிருமே
- மஞ்சள்
மண்ணில் புதைந்திருந்து
மங்கை மனம்திருட
ஆபரணம் என்று மாறி
உலகை ஆளும் தங்கம்
- மஞ்சள்
பொங்கல் குடத்தினிலும்
இன்பம் பொங்கும் நெற்றியிலும்
பூ மிதிக்கும் தடத்தினிலும்
பகல் முழுதும் சுற்றிலுமே
நிறைந்து பரவிவரும் மஞ்சள்
அது இன்பம் தந்திடுமே நெஞ்சில்