Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 362  (Read 597 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 362

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI


அன்பை விதைத்து - அன்பை
அறுவடை செய்ய ஆயத்தமானேன்...
அழும்போதெல்லாம் அரவணைத்து அணைத்துக்கொண்டேன்...
ஆசையாய் பேசும்போதெல்லாம் பாசத்தை பரிமாறிக்கொண்டேன்..

அன்பில் அனைத்தும் அடங்குமென நினைத்தேன்
அரவணைக்க ஆளின்றி அனாதையாய் திரிகிறேன்
அவரவர் தேவையே பெரிதேன கண்டேன்
அன்பை வைத்து அணுவும் ஆசையாதென உணர்ந்தேன்....

கொடுக்கும்வரை வேண்டாமென சொல்லாது இவ்வுலகம்
கொடுத்தவனையே கொடுவாளால் வெட்டும் இவ்வுலகம்
இயற்கை கொடுக்காத வரமா ?
இயற்கைக்கு நேராத கொடுமையா ?

சுவாசிக்க காற்றை கொடுத்து...
காண்பதர்க்கினிய காட்சிகள் கொடுத்து ...
பசியென்றால் புசிக்க உணவளித்து ...
உணவை சமைக்க விறகும் அளித்து..

சுட்டெரிக்கும் வெயிலென்றால் நிழல் கொடுத்து ...
அழகான மாலை தொடுக்க பூ கொடுத்து ...
தாகம் தீர்க்க தித்திக்கும் நீர் கொடுத்து...
யாருமே கொடுக்க முடியா நன்மைகள் பல அளித்து...

அள்ளஅள்ள குறையா வளங்கள் கொண்டு
அழகாய் வாழ வழிகள் பல வகுத்து ...
வாழ்வாய் என்று கூறிய இயற்கைமீது
அப்படி என்னடா மானுடா உனக்கு வன்மம்...?

மரத்தை உடைத்து தீக்குச்சியாக்கி
வனத்தை அழிக்கிறாய் ...
தாகம் தீர்க்கும் ஆற்று நீரில்
சாயம் கலக்கிறாய்...
சுவாசிக்கும் காற்றையும் புகையால் நிரப்பி
மாசுபட செய்கிறாய்...
மலையைக் குடைந்து குகைபோல் செய்து
வழியாய் மாற்றுகிறாய்..

விலங்குகளின் உறைவிடமாம்..
அவர்களுக்கு உரிய இடமாம் காட்டைக்கூட
விட்டுவைக்க மனமின்றி அழித்து
பலமாடி கட்டிடங்கள் முளைக்கச்செய்தாய்...

எத்துனை எத்துனை இடர்களை அம்பாய்
இயற்கையை நோக்கி நீ எறிந்தாலும்
அன்பாய் உன்னை அரவணைத்து
அன்னையாய் உன்னை காத்திடுமே...

சாது மிரண்டால் காடு கொள்ளது...இயற்கையது
சீற்றம் கொண்டால் எந்த சக்தியும் அதை வெல்லாது
அவ்வளவு மகத்துவமும் சக்தியும் கொண்ட இயற்கைக்கே
இவ்வளவு இடர்கள் என்றால் - நானோ சாதாரண மனிதன் தானே?

« Last Edit: December 27, 2024, 11:28:55 AM by VenMaThI »

Offline PreaM

விண்மீன்திரள்களில் வித்தியாசமாக
பால்வெளித் திரளில் குடும்பமாக
சூரியக் குடும்பத்தின் அங்கமாக
மூன்றாவதான உயிர்க்கோளே பூமி

வளம்மிகுந்த பூமியின் பிள்ளைகள் நாம்
இயற்கையின் கொடையால் உயிர் வாழ்கிறோம்
இயற்கைக்கு செய்யும் துரோகம்
நமக்கு நாமே செய்யும் துரோகம்

அத்தியாவசியம் தவிர்த்து அனுபவிக்கும் ஆடம்பரம்
அத்தனையும் இயற்கைக்கு எதிரானது
நிலத்தின் வளத்தை சுரண்டி
பொருளாதார நோக்கத்துடன் செயல்படும் மனிதர்கள்

இன்று பூமியிலே நீரை உறிஞ்சி
நிலத்தின் வளத்தை அழித்து
நிலாவிலே நீரை தேடி
எதற்கு இந்த ஆராய்ச்சி

இருப்பதை அழித்துவிட்டு
பறப்பதிலே  விஞ்ஞானம்
இயற்கையை பயன்படுத்தும் நாம்
இயற்கையை பாதுகாக்க முன்வருவோம்

அழிந்து போகும் ஆற்றல்வளம் பயன்பாட்டை குறைத்து விடு
அழியாத ஆற்றலான
சூரியனையும் காற்றையும்
புதுமையுடன் பயன்படுத்து

மண்வளம் செழிப்புற மரங்கள் பல வளர்க்க
நீர்வளம் சிறக்க மழைவளம் பெருக
இயற்கையுடன் நட்பாவோம்
இயற்கையை பாதுகாப்போம்

இன்பமுடன் நாம் வாழ்வோம்
சந்ததியும் வாழ வழி செய்வோம்

Offline Kavii

பசுமை புரட்சி!

சூரியன் சிரிக்கிறது ஒளி தந்து,
காற்றும் பறந்து வந்து வருடுகிறது தென்றலாய் !
நம் முன்னோர்களின் பூமி சொர்க்க பூமி, ஆனால்
நாம் அதை சோகத்தால் புதைத்து விட்டோம் இன்று!

மண்ணுக்குள் கிடக்கும் எண்ணெய் அழுது கொண்டிருக்க,
அதன் தீயில் மரங்கள் கருகிக்கிடக்க.
பருவமழை தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்க,
பூமி தன்னம்பிக்கை இழந்து துடித்துக்கொண்டிருக்கிறது!

வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பத்தில்,
வீணாகும் மனிதர் சுயநல இச்சையில்.
வானமும் காற்றும் மாசடைகிறது,
வாழும் நீரின் ஓட்டமும் மந்தமாகிறது!

ஆனால் எங்கே துவக்கம்… எங்கே முடிவு?
வளர்ந்துவரும் தொழில்நுட்பம் வாழ்க்கையை மாற்றலாம்,
ஆனால் மனிதன் தான் மனதை மாற்றி உலகை காப்பாற்ற வேண்டும்.

காற்றாடிகள் நம்பிக்கையுடன் சுழல்கின்றன,
சூரிய மின் தகடுகள் கனவுகளாய் மின்னுகின்றன.
மகிழ்வான நாளை நோக்கி நாம் செல்ல,
மனதை மாற்றி வாழ்வில் மாற்றம் உருவாக்குவோம்!

மண்ணின் அழுகையை நிறுத்தி பசுமையை வரவேற்க,
மரங்களை வளர்த்து பூமியின் இதயத்தை மகிழ்விப்போம் !
சூரிய ஒளியில் மின்னும் பசுமை நிலம், அழகிய கனவுகளின் விளிம்பாக மலரட்டும்!
பசுமை சக்தி உலகை புதுமை வெள்ளமாய் ஆட்கொள்ளட்டும்!
பூமிக்கான நம் பயணத்தில் வாழ்வை மீட்டெடுக்கட்டும்!

நாம் கேட்கும் இசை, மரத்தின் இலைகளின் சலசலப்பாக இருக்கட்டும்,
நாம் ரசிக்கும் அழகு மின்னும் கதிர்களின் நிழலாக இருக்கட்டும்.
சூரியன் புன்னகையுடன் தரும் ஒளி போல நாமும் இயற்கையைஅழிக்காமல்,
நம்மை வாழ வைக்கும் பூமிக்கு நாம் பொறுப்புடன் தருவோம் வாழ்க்கை!
இயற்கையை பாதுகாப்போம், பூமி மாதாவை வாழ வைப்போம்!

Offline RajKumar

பசுமை

இவ்வுலகம் வளம்பெற   பசுமை நிறைந்த பூமியை பரிசுயாக கொடுத்து உள்ளது இயற்கை

பூமித்தாய்க்கு பச்சை நிற
ஆடையை உடுத்தி பசுமையாக காட்சி அளித்து அழகு பார்க்கிறாள் இயற்கை

பசுமை மண்ணுலகில்
அனைத்து ஜிவராசிக்களுக்கும்
பசிப்பிணி இல்லாமல் பஞ்சமற்ற
வாழ்வினை தருகிறாள் இயற்கை

விவசாயி தன் வியர்வை துளியால்
தான் சிந்திய இரத்தின் இடங்களில்
வயல்கள் பசுமையாக காட்சியளிக்க
வழி செய்கிறாள் இயற்கை

பயணத்தின் போது நாம் காணும்
சாலையின் இரு புறமும் பச்சை நிறம் கண்ணுக்கு குளிர்ச்சியுட்டி
பார்பவை எல்லாம் மனத்தை மயக்கும்
இயற்கையின் பசுமை

இரசாயன கழிவு நீரை விளைநிலங்களில் கலக்காமல்
இயற்கை உரம் கொண்டு விவசாயம் செய்து பசுமையை காப்போம்

மண்ணை வளப்படுத்தினால்
பூமி பசுமை நிறைந்து நாம் வாழ்வும் வளப்படும்

விவசாயம் செய்வோம்
பசுமை காப்போம்
பசுமை நிலத்தை உருவாக்குவோம்
 அடுத்த தலைமுறை
வாழ வழி வகுப்போம்

Offline TiNu



பூமியின் மன குமுறல்....
==========================

பல கோடி ஆண்டுகள் முன்னே..
நெருப்பு கோலமாக சுற்றிய என்னை..
வளிமண்டலத்தில், நீந்திய நீர் திவளைகள்.
என்னை சிறுக சிறுக குளிர்வித்தது..

குளிர்ந்த என் தேகம் எங்கும்..
சிறுக சிறுக.. ஓரணு ஈரணு.. உயிர்கள்
மெல்ல மெல்ல உருவாகி சிரித்தது..
நானும் மகிழ்ச்சியில்.. மிதந்து நீந்தினேன்..

காலங்கள் பல உருண்டோட..
ஓரணு ஈரணுக்கள் இணைந்து
ஓரறிவு ஈரறிவு ஜீவன் பெருகின..
நானும் ஆனந்தத்தில் திளைத்தேன்..

நாட்கள்... ஆண்டுகள்.. யுகங்கள் என
மெதுவாக.. காலங்கள் நகர நகர..
ஐந்தறிவு ஆறறிவு உயிர்களில்
ஆதிக்க அறிவு.. என்னை திணறடித்து..

ஆறறிவு உயிர்களின் அறிவியல்..
கண்டுபிடிப்பினால்.. தன்னை தானே...
அளித்து.. கொண்டு..என் மேனியையும்..
தீ கனலாக... மாற்ற தொடங்குவது ஏனோ...

பஞ்சபூதங்களாய்.. ஐவரும் கைகோர்த்து..
களித்திருந்த இருந்த... எங்களை.. பேராசையின்
உச்சத்தில்.. இயற்கை கொன்று.. செயற்கை படைத்தது.. 
எங்களை  மெதுமெதுவாய்..  அழிப்பது நியாயமா?

அட மூளையில்லா.. முட்டாள் உயிர்களே...
உங்களின் விஞ்ஞான செயல் யாவும்...
நுனி கிளைகளில் அமர்ந்து கொண்டு...
அடிமரத்தை.. வெட்டி சாய்ப்பதற்கு சமமே...

இப்படியே இச்செயல் தொடருமாகின்... ஓர் நாள்!
நீயும்! உயிரற்ற உணர்ச்சிகளற்ற... ஓர் துகளே...



Online Ramesh GR

அன்பு மனிதனே உனக்கென்று ஒரு உலகம் அதில் நீ ஆட்சி செய்கிறாய்

உனக்கு கீழ் எல்லாம் உள்ளது, அணைத்து உயிர்களும் நீ சொல்வதை செய்யும், உன் விருப்பதிற்கு ஏற்றார் போல் அனைத்தையும் மாற்றுவாய், எப்போழுதும் உன் கட்டுப்பாட்டுக்குள்ளே அனைத்தும் இருக்கும் என்ற மமதையில்  இருக்கு நீ என்னால் வீழ்வது நிச்சயம்

நானே இயற்க்கை பேசுகிறேன் கேள்

அனைத்தும் அமைதியாய் இருந்தது உன் பேராசையால் அனைத்துக்கும் மூலமான மலைகளை தகர்த்துத்தாய், பல நோய்களுக்கு உள்ளானாய்

இயற்கையின் உணவு சங்கிலியை உடைத்தாய் பல உயிரினங்கள் அழிய காரணம் ஆனாய், உன்ன உணவின்றி அலைந்தாய்

உனக்கு மூச்சு கற்று கொடுத்த காடுகளை அழித்தாய் இப்பொது காற்றை காசுக்கு வாங்குகிறாய்

பூச்சிக்கொல்லி மருந்தை தெளிதாய் பல சிறு நுண் உர்களை கொன்றாய் இப்பொது அது உன் ஆயுளையும் குறைகிறது

இந்த உலகின் உயிர் நாடி கடல் அதையும் விட்டு வைக்கவில்லை உனக்கு தேவையாற்ற குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்தாய், கோவம் கொண்ட கடல் அன்னை பூமிக்கு நீ பாரம் என்று அந்த குப்பைகளோடு உன்னையும் சுனாமி என்ற பெயரில் உன்னையும் சேர்த்துக்கொண்டால்

நன்றிகெட்ட மனித இனமே என் பொறுமை முடியும் காலம் நெருங்கி விட்டது இனியாவது திருந்தி விடு இல்லை

இதுவரை பார்க்காத பல விளைவுகளை சந்திக்கும் உன் வருங்கால சந்ததிகள்

நீ செய்யும் ஒரு ஒரு தவறுக்கும் அதான் விளைவை அனுபவிப்பது உன் சந்ததி என்ற எண்ணத்தை கொண்டு இருக்கு இயற்க்கையை காப்பாற்ற முயற்சி செய்...

Offline SweeTie

பற்றி எரிகிறது  ஒரு நகரம்
பனிப்புயலில்  சிக்கித் தவிக்கிறது ஒன்று
கடலில்  மூள்கிறது  வேறொன்று
சூறை  காற்றால்  அழிகிறது  இன்னொன்று

பனிப்  பாறைகள் உருகி  போக 
விளைநிலங்கள்  நீரின்றி பாலையாய் மாறிப்போக
 பாலைவனங்களில்  வெள்ளம் பெருக்கெடுக்க
இயற்கையின்  கோர தாண்டவமா ?
 
பஞ்ச பூதங்களின்    சாபமா  இல்லை
ஆறறிவு  மனிதனின் அகங்காரமா ?
இயற்கையின்  அழிவு   ஒருபுறம்
செயற்கை அழிப்பு   மறுபுறம் 

இயற்கையை படைத்தான் இறைவன்
இன்னல்கள் இன்றி மனிதன் வாழ
இயற்கையை அழித்தான் மனிதன்
இன்னல்கள்  வருமென தெரியா மூடன்

வஞ்சகம்  பொறாமை வன்மம்  சூழ்ச்சி
ஆயுதமாக  கொண்டான் மனிதன்
மனிதம்  என்பதை அடியோடு மறந்தான்
சுயநலமே  மணிமுடி ஆனது

இயற்கையை மிஞ்சும்  செயற்கைகள்
நுண்ணறிவின் அபரீத  வளர்ச்சிகள்
மனிதனின் பேராசையின்  விஷ்வரூபம்
ஐம்பூதங்களின்   கோர தாண்டவத்துக்கு
இணையாகுமா?





« Last Edit: January 15, 2025, 08:59:09 PM by SweeTie »