பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : பி. ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
பெண் : என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
ஆண் : என்னை எழுப்பிய
பூங்காற்றே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய
மெல்லிசையே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
பெண் : உடம்பில்
உறைகின்ற ஓர்
உயிர் போல் உனக்குள்
தானே நான் இருந்தேன்
ஆண் : என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
பெண் : இன்று எழுதிய
என் கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
பெண் : மண்ணைத்
திறந்தால் நீர் இருக்கும்
என் மனதைத் திறந்தால்
நீ இருப்பாய்
ஆண் : ஒளியைத்
திறந்தால் இசை
இருக்கும் என்
உயிரைத் திறந்தால்
நீ இருப்பாய்
பெண் : வானம் திறந்தால்
மழை இருக்கும் என்
வயதைத் திறந்தால்
நீ இருப்பாய்
ஆண் : இரவைத் திறந்தால்
பகல் இருக்கும் என்
இமையைத் திறந்தால்
நீ இருப்பாய்
பெண் : என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
பெண் : இலையும்
மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
ஆண் : அலையும் கரையும்
உரசுகையில் பேசும் பாஷை
பேசிடுமோ
பெண் : மண்ணும் விண்ணும்
உரசுகையில் என்ன பாஷை
பேசிடுமோ
ஆண் : பார்வை ரெண்டும்
பேசிக்கொண்டால் பாஷை
ஊமை ஆய்விடுமோ
பெண் : என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
ஆண் : என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
பெண் : என்னை எழுப்பிய
பூங்காற்றே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய
மெல்லிசையே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
ஆண் : உடம்பில்
உறைகின்ற ஓர்
உயிர் போல் உனக்குள்
தானே நான் இருந்தேன்
பெண் : என் மேல்
விழுந்த மழைத்
துளியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என்
கவியே இத்தனை
நாளாய் எங்கிருந்தாய்