Author Topic: 🌹Kaalayil dhinamum🌹  (Read 450 times)

Offline Jithika

🌹Kaalayil dhinamum🌹
« on: December 11, 2024, 05:57:59 PM »

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : { காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா } (2)

ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது

ஆண் : { காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா } (2)

ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது

ஆண் : நிறைமாத நிலவே
வா வா நடை போடு மெதுவா
மெதுவா அழகே உன் பாடு
அறிவேன் அம்மா

ஆண் : மசக்கைகள் மயக்கம்
கொண்டு மடி சாயும் வாழை
தண்டு சுமையல்ல பாரம்
சுகம் தான் அம்மா

ஆண் : தாயான பின்பு
தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி
கண்மணி கண்மணி

ஆண் : காலையில் தினமும்
கண் விழித்தால் நான்
கை தொடும் தேவதை
அம்மா அன்பென்றாலே
அம்மா என் தாய்
போல் ஆகிடுமா

ஆண் : இமை போல்
இரவும் பகலும் எனை
காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி
ஆகும் சிறியது

பெண் : ………………………….

பெண் : ஒரு பிள்ளை கருவில்
கொண்டு ஒரு பிள்ளை கையில்
கொண்டு உறவாடும் யோகம்
ஒரு தாய்கென்று

பெண் : மழலை போல்
உந்தன் நெஞ்சம் உறங்கட்டும்
பாவம் கொஞ்சம் தாய்க்கு பின்
தாரம் நான்தான் அய்யா

பெண் : தாலேலோ
பாடுவேன் நீ தூங்குடா
தாயாக்கி வைத்ததே
நீயடா நீயடா

பெண் : தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ

பெண் : நிலவோ நிலத்தில்
இறங்கி உன்னை கொஞ்ச
எண்ணுதே அதிகாலை சேவல்
கூவும் அதுவரை பஞ்சு நெஞ்சில்
நீயும் உறங்கிடு

பெண் : தலைவா நீதான்
எந்தன் செல்ல பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
தனிசை பூவே தாலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ

பெண் : ………………………….