Author Topic: மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்  (Read 694 times)

Offline Thooriga


பாடலாசிரியர் - வாலி

பாடகர் - எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் - இளையராஜா   

திரைப்படம் - மறுபடியும்

திரைக்கு வந்த நாள்  - 14.01.1993


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…

இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…


மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்…
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்…
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்…
எழுதிய அன்பு இலக்கியம்தவறாகலாம்…

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு…
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு…
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே…

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…



கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது…
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது…
கடல்களில் உருவாகும் அலையானது…
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது…

நிலவினை நம்பி இரவுகள் இல்லை…
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை…
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்…


நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…


இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…
இளவேனில் உன் வாசல் வந்தாடும்…
இளந் தென்றல் உன் மீது பண்பாடும்…

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்…
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்…
« Last Edit: March 12, 2025, 11:09:15 AM by Thooriga »

Offline Thooriga

பாடலாசிரியர் - வைரமுத்து

பாடகர் - சுவர்ணலதா

இசையமைப்பாளர்   - ஏ.ஆர்.ரகுமான்
   
திரைப்படம் - அலைபாயுதே

திரைக்கு வந்த நாள்  - 14.04.2000

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…


எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்…
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்…

கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்…
கேட்பது எவனோ அறியவில்லை…
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே…
அவன் ஊதும் ரகசியம் புாியவில்லை…

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…


புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…



புல்லாங்குழலே பூங்குழலே…
நீயும் நானும் ஒரு ஜாதி…
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே…
உனக்கும் எனக்கும் சாிபாதி…

கண்களை வருடும் தேனிசையில்…
என் காலம் கவலை மறந்திருப்பேன்…
இன்னிசை மட்டும் இல்லையென்றால்…
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்…


எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…


உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…



உறக்கம் இல்லா முன்னிரவில்…
என் உள்மனதில் ஒரு மாறுதலா…
இரக்கம் இல்லா இரவுகளில்…
இது எவனோ அனுப்பும் ஆறுதலா…

எந்தன் சோகம் தீா்வதற்கு…
இதுபோல் மருந்து பிறிதில்லையே…
அந்தக் குழலை போல் அழுவதற்கு…
அத்தனை கண்கள் எனக்கில்லையே…

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…
எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்…


« Last Edit: March 12, 2025, 11:13:53 AM by Thooriga »

Offline Thooriga

பாடலாசிரியர் -   இளந்தேவன்

பாடகர் - சித்ரா , அனுராதா

இசையமைப்பாளர்   - தேவா
   
திரைப்படம் - கல்கி

திரைக்கு வந்த நாள்  - 10.11.1996

முத்து முத்து மகளே! முகம் காணாத மகளே!
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மணியே!
நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்

வானத்து மலரே! வையத்து நிலவே!
வாழ்க்கையின் பொருளே வா!
எழுதுகிறேன் ஒரு கடிதம்.
மலடியின் மகளே மகள் எனும் கனவே
மடியினிலே நீ வா!
எழுதுகிறேன் ஒரு கடிதம்.

பாறையில் மலர்ந்த தாமரையே!
இரவினில் எழுந்த சூரியனே!
எழாமலே எழும் நிலா நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.

முந்நூறு நாள் கற்பத்திலே வாராத பெண் நீயடி!
எந்நாளுமே நான் பொம்மைதாய் என்றாலும் தாய்தானடி!
உலாவும் வானம்பாடியாய் பண்பாடி வாழ்க கண்ணே!
புறாவைப்போல சாந்தமாய்
பண்பாடு போற்று கண்ணே!
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெரும் சுகம் நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.
சிந்தாமணி என் கண்மணி சிற்றாடை நீ கட்டடி!
என் மாளிகை முற்றத்திலே பொன்னூஞ்சல் நீ ஆடடி!
குலாவும் அன்புக்கோகிலம் எங்கேயும் கானம் பாடு!
கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு!
நல்லவளாக நடை போடு! வல்லவளாகிட தடை ஏது!
விழாமலே விழும் மழை நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்.

பொல்லாதது உன் பூமி தான்
போராட்டம்  தான் வாழ்வடி!
கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் சொல்வாரடி!
வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது!
பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஓது!
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி!
தொடாமலே சுடும் கனல் நீயே!


வானத்து மலரே! வையத்து நிலவே!
வாழ்க்கையின் பொருளே வா!
மலடியின் மலடியின் மகளே மகள் எனும் கனவே
மடியினிலே நீ வா!
பாறையில் மலர்ந்த தாமரையே!
இரவினில் எழுந்த சூரியனே!
எழாமலே எழும் நிலா நீயே!
எழுதுகிறேன் ஒரு கடிதம்.