8
« Last post by joker on April 21, 2025, 07:54:23 PM »
நம்முடைய
மனசை
அறிந்துகொள்பவர்
நம் அருகில் இருந்தால்
அவர்களது ஸ்பரிசம்
நம் துன்பங்களையும்
கவலைகளையும் மெல்ல
தொட்டாவாடி இலையை போல
நான் உன்னை
நினைக்கும் போது எல்லாம்
இதயத்தில்
முள் குத்தும் வலி
உணர்கிறேன்
விலகுதலின்
வலி பற்றி நான்
என் இதயத்திற்கு
கற்பிக்க தவறியதால்
இன்னும் நீ
என் மனதில்
நிலைத்திருக்கிறாய்
வாழ்க்கை என்னும்
பயணத்தில்
சில உறவுகள்
பாதியில்
வந்து சேர்கின்றன
சில உறவுகள்
பாதியில்
விட்டு பிரிகின்றன
அதில்
அன்பு, காதல்
வலி, பிரிவு,
வஞ்சனை , ஏமாற்றுதல்
எல்லாம் அரங்கேறி
செல்லும்
சில விஷயங்கள்
நம்மை அறியாமலேயே
நம்மை ஏமாற்றிக்கொண்டே இருக்கும்.
இருப்பினும்
சிலநேரம்
எவ்வளவு முயன்றாலும்
சிலவற்றை நம்மால்
விட்டுவிட இயலாது
அது
நம் தவறு அல்ல
அது
அவர்
நல்ல இதயத்திற்கு
சொந்தக்காரராக
இருப்பதனால் இருக்கலாம்
அப்படி இருப்பவர் தான்
அதிக ஏமாற்றுதலை
கடந்து பயணிக்க
வேண்டி இருக்கும்
****Joker****